பதிவு செய்த நாள்
03 செப்2017
06:00
புதுடில்லி, செப். 3–மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த இரு மாதங்களில், 503.40 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்கு அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு, அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.இதில், ஏ.எம்.பி., சோலார் இந்தியா நிறுவனத்தின் திட்ட மதிப்பு மட்டும், 500 கோடி ரூபாய். இத்துடன், ஆதித்ய பிர்லா கேப்பிட்டல், பர்ஸ்ட் ஸ்பேஸ் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றின் அன்னிய நேரடி முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.சி.வி.சி., ஏஷியா நிறுவனத்தின், 3.32 கோடி ரூபாய் மதிப்பிலான, அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தஸ் வே எமர்ஜிங் மார்கெட்ஸ் நிறுவனம், ஏற்கனவே அளித்திருந்த திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது. கடந்த நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு, 9 சதவீதம் உயர்ந்து, 4,347 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|