பதிவு செய்த நாள்
03 செப்2017
06:01
புதுடில்லி : ஏற்றுமதியாளர்களுக்கு, ‘இ – வாலட்’ எனப்படும், மின்னணு பணப் பை வசதியை ஏற்படுத்துவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:முந்தைய வரி திட்டத்தில், ஏற்றுமதியாளர்கள், சரக்கு ஏற்றுமதிக்கு முன்னதாகவே, வரி விலக்கு சலுகையை பெற்று வந்தனர்.ஆனால், ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், ஏற்றுமதியாளர்கள் முதலில் வரி செலுத்தி, சரக்கு ஏற்றுமதிக்கு பின், வரித் தொகையை திரும்பப் பெறுகின்றனர். இந்த நடைமுறையால், 1.85 லட்சம் கோடி ரூபாய், அரசிடம் முடங்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதனம், கடுமையாக பாதிக்கப்படும்.எனவே, ஏற்றுமதிக்கு என, ‘இ – வாலட்’ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்றுமதியாளர்கள், வரிக்கு உட்பட்ட பொருட்களை கையாளும் போது, மின்னணு பணப் பையில் செய்துள்ள டிபாசிட்டில் இருந்து வரி பிடித்தம் செய்யப்படும். சரக்கு ஏற்றுமதி செய்த சான்று அளித்தவுடன், வரித் தொகை, மின்னணு பணப் பையில் வரவு வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|