ஏற்றுமதிக்கு, ‘இ – வாலட்’ வசதி மத்திய அரசு பரிசீலனைஏற்றுமதிக்கு, ‘இ – வாலட்’ வசதி மத்திய அரசு பரிசீலனை ... பங்­கு­களில் முத­லீடு அதி­க­ரிப்பு பங்­கு­களில் முத­லீடு அதி­க­ரிப்பு ...
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்... இந்தியாவின் மொத்த பொது கடன் ரூ.63.35 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2017
06:02

புதுடில்லி : நடப்பு, 2017-- – 18ம் நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், நாட்டின் மொத்த பொது கடன், 3.6 சத­வீ­தம் அதி­க­ரித்து, 63.35 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.கடந்த நிதி­யாண்­டின், ஜன., – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், நாட்­டின், மொத்த பொது கடன் (பொது கணக்­கின் கீழ் உள்ள கடன்­கள் நீங்­க­லாக) 61.13 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள, பொது கடன் மேலாண்மை அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.அதில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:நடப்பு நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், நாட்­டின் மொத்த பொது கட­னில், உள்­நாட்­டின் பங்கு, 93 சத­வீ­த­மாக உள்­ளது; அதில், நிதிச் சந்தை கடன்­களின் பங்கு, 83.2 சத­வீ­த­மா­கும். நாட்­டில், பணப்­பு­ழக்­கம் நன்கு உள்­ளது.பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு பின், மதிப்­பீட்டு காலாண்­டில், பணம் உப­ரி­யா­கவே புழக்­கத்­தில் இருந்­துள்­ளது.கடந்த, 2016- – 17ம் நிதி­யாண்டு துவக்­கத்­தில், மத்­திய அமைச்­ச­கங்­கள் புதிய திட்­டங்­களை செயல்­ப­டுத்த முனைந்­தன. இதை­யொட்டி, இத்­திட்­டங்­களின் முதற்­கட்ட செல­வி­னங்­க­ளுக்­காக, அதிக தொகை ஒதுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அதே சம­யம், ஏற்­க­னவே வெளி­யிட்டு முதிர்ச்சி அடைந்த, அரசு கடன் பத்­தி­ரங்­க­ளுக்கு, திரும்­பத் தர வேண்­டிய தொகை­யும் அதி­க­மாக இருந்­தது. இது போன்ற கார­ணங்­க­ளு­டன், வழக்­க­மாக, முதல் அரை­யாண்­டில் குறைந்து காணப்­படும் பணப்­பு­ழக்­க­மும், நிதி தட்­டுப்­பாட்­டிற்கு வழி­வ­குத்து விட்­டது. இதன் கார­ண­மாக, மத்­திய அரசு, முதல் காலாண்­டில், ரிசர்வ் வங்­கி­யி­டம் இருந்து, மிகைப் பற்று, தற்­கா­லிக கடன் உட்­பட, பல வழி­களில் பணம் திரட்­டி­யது. இந்த வகை­யில், மத்­திய அரசு, 1.30 லட்­சம் கோடி ரூபாய் பெற்­றது. இத்­தொ­கை­யில், 40 ஆயி­ரம் கோடி ரூபாய், அதே காலாண்­டில் திரும்ப அளிக்­கப்­பட்­டது.இதை­ய­டுத்து, மத்­திய அரசு, நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், ரிசர்வ் வங்­கி­யி­டம் இருந்து பெறும் தற்­கா­லிக கட­னுக்­கான வரம்பை, 60 ஆயி­ரம் கோடி ரூபா­யாக நிர்­ண­யித்­தது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.மத்­திய அரசு, குடி­நீர் வசதி, மின்­சா­ரம், சாலை, துறை­மு­கம், விமான நிலை­யம் உள்­ளிட்ட, அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தால், அவற்­றுக்­கான நிதி ஒதுக்­கீடு அதி­க­ரித்­துள்­ளது.
ரிசர்வ் வங்கியின் பங்குதேசிய பொது கடன் என்­பது, மத்­திய அரசு பெறும் மொத்த கட­னில் ஒரு பகு­தி­யா­கும். இதில், நிதிச் சந்தை கடன்­கள், சிறப்பு கடன் பத்­தி­ரங்­கள், கரு­வூல பில்­கள், சிறப்பு கடன்­கள், கடன் பத்­தி­ரங்­கள் ஆகி­ய­வை­யும், வெளி­நா­டு­க­ளுக்கு அளிக்க வேண்­டிய கட­னும் அடங்­கும்.மத்­திய அர­சின் ரொக்க கணக்கை பரா­ம­ரிக்­கும் பொறுப்பு, ரிசர்வ் வங்­கி­யி­டம் உள்­ளது. பணத் தட்­டுப்­பாடு ஏற்­படும் போது, ரிசர்வ் வங்கி வாயி­லாக பெறும் தற்­கா­லிக கடன்­கள், கடன் பத்­திர வெளி­யீ­டு­கள் போன்­ற­வற்­றின் மூலம், நிலைமை சமா­ளிக்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)