நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்... இந்தியாவின் மொத்த பொது கடன் ரூ.63.35 லட்சம் கோடியாக உயர்வுநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்... இந்தியாவின் மொத்த பொது கடன் ரூ.63.35 ... ... பங்­கு­களில் முத­லீடு அதி­க­ரிப்பு பங்­கு­களில் முத­லீடு அதி­க­ரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தடை­களை எதிர்­கொள்ளும் வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2017
07:24

எந்த வகை­யான தடை அல்­லது சவால்­க­ளையும் வெற்­றி­க­ர­மாக எதிர்­கொண்டு, சாத­க­மாக மாற்றிக் கொள்­வ­தற்­கான வழி­களை, ‘தி அப்ஸ்­டகல் ஈஸ் தி வே’ புத்­த­கத்தில், ரயான் ஹாலிடே விவ­ரிக்­கிறார்:

நம்மைச் சுற்­றி­யுள்ள விஷ­யங்­களை நாம் எப்­படி பார்த்து, அவை தொடர்­பான கருத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­கிறோம் என்­பது மிகவும் முக்­கி­ய­மா­னது. இந்த விஷ­யங்கள் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய விளை­வுகள் பற்றி என்ன நினைக்­கிறோம் என்­பதும் முக்­கியம். நம்­மு­டைய இந்த கருத்து பல­மா­கவோ, பல­வீ­ன­மா­கவோ அமை­யலாம். தடை­களை எதிர்­கொள்ளும் போது, நாம் சில விஷ­யங்­களை நினைவில் கொள்ள வேண்டும். நாம், அறி­வுப்­பூர்­வ­மாக நடந்து கொள்­ளவும், உணர்ச்­சி­களை கட்­டுப்­ப­டுத்­தவும் முயற்­சிக்க வேண்டும்.

பதற்­ற­ம­டை­யாமல், எல்­லா­வற்­றையும் சரி­யாக பொருத்திப் பார்க்க வேண்டும். தற்­போ­தைய தரு­ணத்தில் மனதை செலுத்தி கட்­டுப்­ப­டுத்­தக்­ கூ­டி­யவை மீது கவனம் செலுத்த வேண்டும்.இவ்­வாறு செய்­வதன் மூலம் தடை­க­ளுக்கு மத்­தியில் வாய்ப்­பு­களை காணலாம். இதற்கு கொஞ்சம் பயிற்சி தேவை. நிகழ்­வுகள் தொடர்­பான நம்­மு­டைய புரி­தலால் நாம் அவற்றை சிக்­க­லாக்கி கொள்­கிறோம். நம்­மு­டைய புரிதல் இல்­லாமல் நல்­லதோ, தீங்­கா­னதோ இல்லை. நிகழ்­வுகள் இருக்­கின்­றன. அவற்றை பற்றி நாம் சொல்­லிக் ­கொள்ளும் கதைகள் இருக்­கின்­றன. ஆக, எண்ணம் தான் எல்­லா­வற்­றையும் மாற்­று­கி­றது அல்­லவா?

ஒரு சூழல் மோச­மாக இருக்­கி­றது என, மற்­ற­வர்கள் சொல்­வதால் மட்டும் அது அவ்­வாறு ஆகி­வி­டு­வ­தில்லை. நாமும் அப்­படி சொல்லிக் கொள்­கிறோம். ஆக, நாம் கொண்­டு உள்ள கருத்து பல­வற்றை மாற்­றக்­கூ­டி­யது என்­பதை அறிய வேண்டும். உண்­மையில் நம் சூழல் எந்த அளவு ஆபத்­தாக இருக்­கி­றது என்­பதை மீறி, நாம் கொண்­டுள்ள மன அழுத்தம், அச்­சத்தின் விளை­வு­க­ளுக்கு உள்­ளாக்­கு­கி­றது. நெருக்­க­டி­யான சூழல் அல்­லது தடையை எதிர்­கொள்ளும் போது, உங்­க­ளுக்குள் ஒரு உரை­யா­டலை மேற்­கொள்­ளுங்கள்.

நடந்த நிகழ்­வுகள் உங்­களை நியா­ய­மாக, கட்­டுப்­பாட்­டுடன், கரு­ணை­யுடன், நேர்­மை­யாக, புத்­தி­சா­லித்­த­ன­மாக நடந்து கொள்­வதில் இருந்து தடுக்­கி­றதா? இல்லை எனில், உங்கள் வேலையில் கவனம் செலுத்­துங்கள்.இந்த நிலை பற்றி நான் கவ­லைப்­பட வேண்­டுமா எனும் கேள்­வியை ஆழ் மனதில் கேட்டுக் கொண்டே இருங்கள். இந்த சூழலில் இருந்து உங்­களை விலக்கி கொண்டு, மற்­ற­வர்களுக்கு ஆலோ­சனை சொல்­வது போல யோசித்துப் பாருங்கள். மற்­ற­வர்கள் நிலையில் யோசிக்கும் போது சுமை­யில்­லாமல் யோசிக்­கலாம். உங்கள் சூழலை எடுத்துக் கொண்டு, அது உங்­க­ளுக்கு நிக­ழ­வில்லை என நினைத்துக் கொண்டு யோசி­யுங்கள். இந்த சூழலை எப்­படி கையா­ளலாம் என யோசித்துப் பாருங்கள். நாம் கொள்ளும் கருத்தே எல்­லா­வற்­றையும் தீர்­மா­னிக்­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)