பதிவு செய்த நாள்
04 செப்2017
07:30
பங்குச் சந்தை முதலீட்டாளராக திகழ பொறுமையும், நிதானமும் அவசியம். சந்தையின் ஏற்றத்தாழ்வு தொடர்பான பரபரப்புக்கு மத்தியிலும், பங்குகளின் அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும். அதோடு, பங்கு முதலீட்டாளர்கள் செய்யும் வழக்கமான தவறுகளையும் தவிர்க்க வேண்டும். பொதுவாக, பங்கு முதலீட்டாளர்கள் செய்யும் இந்த தவறுகளை தவிர்ப்பதன் மூலம், பங்கு முதலீட்டில் உங்கள் வெற்றி விகிதத்தை அதிகமாக்கி கொள்ளலாம்.
திட்டம் தேவை:
எந்த ஒரு முதலீட்டாளருக்கும் தெளிவான திட்டம் அவசியம். அப்போது தான் என்ன தேவை என்பதை தீர்மானிக்க முடியும். அதற்கேற்ப முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்யலாம். ஒரு சிலர், ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்யலாம். இன்னும் சிலர், குறுகிய பலனை மனதில் கொண்டு முதலீடு செய்யலாம். எப்படி இருந்தாலும், முதலீட்டிற்கான அடிப்படை திட்டம் இருந்தால் மட்டுமே, என்ன வகை பங்குகளில், எவ்வளவு காலம் முதலீடு செய்யலாம் என, தீர்மானிக்க முடியும்.
ஆய்வு அவசியம்:
திட்டமிடாமல் முதலீடு செய்வதைப் போலவே, போதிய ஆய்வு செய்யாமல் முதலீடு செய்வதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகள் அல்லது வெறும் யூகத்தின் அடிப்படையில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். பங்குகளின் செயல்பாடு, வரலாறு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றின் அடிப்படை பற்றி தெளிவு பெற்ற பின், முதலீடு குறித்து தீர்மானிக்க வேண்டும்.
சந்தை போக்கு:
சந்தையின் போக்கு தொடர்பாக வெளியாகும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. பங்குகள் தொடர்பான அறிக்கைகளை வாசிக்கலாம். ஆனால், சந்தை போக்கை பின்தொடர்ந்து செயல்படும் போது, பல நேரங்களில் யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய நேரலாம். இதனால், இழப்பும் உண்டாகலாம். சந்தை போக்கை கவனத்தில் கொண்டாலும், சொந்தமாக ஆய்வு செய்ய வேண்டும்.
முதலீட்டு கூடை:
உங்களிடம் புரோட்போலியோ என சொல்லப்படும் முதலீட்டு கூடை இருக்க வேண்டும். அதில் பங்குகள், பத்திரங்கள், இ.டி.எப்.,கள் என, பல வகையான முதலீட்டு சாதனங்கள் இருக்க வேண்டும். அதாவது, உங்கள் முதலீடு பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக, பங்குகளில் மட்டும் முதலீடு செய்வது ரிஸ்கானது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள பரவலாக்கல் அவசியம்.
பலன் மட்டும் போதுமா?
அதிக பலன் தரும் பங்குகளில் மட்டும் கவனம் செலுத்துவது ரிஸ்கானது. பங்குகள் கடந்த காலத்தில் சிறந்த பலனை அளித்த காரணத்தால் மட்டும், அவை தொடர்ந்து அதே விதமான பலன் தரும் என்ற நிச்சயமில்லை. எனவே, எதிர்கால வளர்ச்சி சாத்தியமான பங்குகளிலும் கவனம் செலுத்த வேண்டும். நிறுவன செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்து தீர்மானிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|