பங்­கு­களில் முத­லீடு அதி­க­ரிப்புபங்­கு­களில் முத­லீடு அதி­க­ரிப்பு ... பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் ...
பண்­டிகை கால செலவில் தாராளம் காட்டலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2017
07:32

தசரா, தீபா­வளி, கிறிஸ்­துமஸ் என, வரி­சை­யாக பண்­டி­கைகள் அணி­வ­குக்கும் விழா காலத்தின் கொண்­டாட்ட மன நிலையில், ‘ஷாப்பிங்’ செய்­வதும் முக்­கிய பங்கு வகிக்­கி­றது. விழா காலத்தில், புத்­தா­டை­களும், தேவை­யான பொருட்­களும் வாங்கி மகி­ழலாம் என்­றாலும், இதில் ஒரு கட்­டுப்­பாடும் அவ­சியம் என, வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

தள்­ளு­படி போன்ற சலு­கை­களால் ஈர்க்­கப்­பட்டு அள­வுக்கு அதி­க­மாக செலவு செய்தால், கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்­கி­றது. எனவே, விழா கால செல­வு­களை தீர்­மா­னிக்கும் முன், சில விஷ­யங்­களை மனதில் கொள்­வது நல்­லது.

திட்­ட­மிடல்:
முதலில் விருப்­பங்­க­ளையும், தேவை­க­ளையும் பிரித்­த­றிய வேண்டும். தேவை­யான பொருட்­களை வாங்­கலாம், ஆனால், விரும்­பிய பொருட்­களை எல்லாம் வாங்­கு­வதை தவிர்ப்­பது நலம். எனவே, விழா கால ‘ஷாப்­பிங்’கை துவக்கும் முன், எந்த பொருட்­களை எல்லாம் வாங்க வேண்டும் என, திட்­ட­மிட்டு பட்­டியல் போட வேண்டும்; அதற்­கான பட்­ஜெட்­டையும் தீர்­மா­னித்துக் கொள்ள வேண்டும். இந்த பட்­டி­ய­லுக்கு ஏற்­பவே பொருட்­களை வாங்க வேண்டும். இப்­படி செய்­வதன் மூலம், பார்த்­த­வுடன் விருப்பம் கொண்டு பொருட்­களை வாங்­கு­வதை தவிர்க்­கலாம்.

விழா காலம் என்­ற­வுடன், தள்­ளு­படி அறி­விப்­பு­களும் அனேகம் இருக்கும். ஆன்­லை­னிலும் பல அதி­ரடி தள்­ளு­படி திட்­டங்­களை காணலாம். ஆனால், தள்­ளு­ப­டியை பார்த்­த­வுடன் பொருட்­களை வாங்க வேண்டாம். அந்த பொருள் தேவை தானா என, யோசிக்க வேண்டும். அதன் பின், உண்­மை­யி­லேயே அந்த பொருள் தள்­ளு­ப­டியில் கிடைக்­கி­றதா என்­ப­தற்­காக விலை­களை ஒப்­பிட்டு பார்க்க வேண்டும். இணை­யத்தில் பல விலை ஒப்­பீட்டு இணை­ய­தளங்கள் இருக்­கின்­றன.

பொது­வாக சேமித்து வைத்­து இ­ருக்கும் பணத்தில் பொருட்­களை வாங்­கு­வதே சரி­யாக இருக்கும். இதற்­கென கடன் வாங்­கு­வது சரியல்ல. இது, கூடுதல் சுமையை ஏற்­ப­டுத்தும். கிரெடிட் கார்டு வச­தி­யையும் திட்­ட­மிட்டு புத்­தி­சாலித்­த­ன­மாக பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். ஆனால், கிரெடிட் கார்டு தொகைக்­கான காலத்­தையும் கணக்­கிட வேண்டும்.

அதே போல நெருங்­கி­ய­வர்­களுக்கும், நண்­பர்­க­ளுக்கும் பண்­டிகை கால பரி­சுகள் வாங்கிக் கொடுக்கும் போது, நீண்ட நாள் சொத்­தாக இருக்­கக்­கூ­டிய வகையில் நிதி சாத­னங்­களை தேர்வு செய்து பரி­ச­ளிக்­கலாம்; தங்க நாணயம் போன்­ற­வையும் ஏற்­றவை. அது மட்டும் அல்ல, இந்த பண்­டி­கைக்­காக தனியே சேமித்து வைத்­தி­ருக்­க­வில்லை எனில், அடுத்த பண்­டிகை காலத்­திற்­கான சேமிப்பை இப்­போது துவங்­கலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)