பதிவு செய்த நாள்
07 செப்2017
00:14
மும்பை : மத்திய பிரதேசம் மாநிலம், இந்துாரைச் சேர்ந்த, பிரதாப் ஸ்னாக்ஸ் நிறுவனம், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், அடுத்த இரு மாதங்களுக்குள், பங்கு வெளியீடு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமித் குமாட் கூறியதாவது: பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான நேரம் குறித்து, வணிக வங்கியாளர்களிடம் ஆலோசித்து வருகிறோம். அக்., – நவ., மாதங்களுக்குள், நிச்சயமாக பங்குகள், பங்குச் சந்தைகளின் பட்டியலில் இடம் பெறும். பங்கு வெளியீடு வாயிலாக, நிறுவனம், 250 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின், ‘சிப்ஸ்’ தொழிற்சாலையின் உற்பத்தியை, 50 சதவீதம் அதிகரிக்கவும், இதர தின்பண்டங்களின் உற்பத்தியை, இரு மடங்கு உயர்த்தவும் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதாப் ஸ்னாக்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம், கடந்த ஆண்டு விண்ணப்பித்து இருந்தது. இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த, ‘செபி’ புதிய பங்கு வெளியீட்டிற்கு, ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|