பதிவு செய்த நாள்
07 செப்2017
00:17
சென்னை : ‘‘பொதுத் துறை வங்கிகளுக்கு, வாராக்கடனை குறைத்து, நிதி நிலையை சீர்படுத்துவது மிகப்பெரிய சவால்,’’ என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்து உள்ளார்.
அவர், சென்னையில், தன், ‘ஐ டூ வாட் டு டூ’ என்ற நுால் வெளியீட்டு விழாவில் பேசியதாவது: ரிசர்வ் வங்கி கவர்னராக பணியாற்றிய போது, வங்கித் துறையில் போட்டியை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தேன். அதன் விளைவாக, ‘பேமென்ட் பேங்க், ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ போன்ற புதிய வங்கிகள் தோன்றின.
ரிசர்வ் வங்கி கவர்னராகவும், நிதித் துறையில் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியதில், இரு அமைப்புகள் குறித்தும், ஆழ்ந்து புரிந்து கொள்ள முடிந்தது.நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என, விரும்புகிறீர்களோ, அதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் முடிவிற்கு வலு சேர்க்க, தீர்க்கமான காரணங்களை முன்வைக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி கவர்னர் என்பவர், ஒரு செயலை மேற்கொள்ள வேண்டாம் என, முடிவெடுத்து, அதன்படி செயல்படாமல் இருந்தால், அதற்கான காரணத்தை. தொடர்ந்து அரசுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|