‘பொது துறை வங்கிகளின் மிகப்பெரிய சவால்’‘பொது துறை வங்கிகளின் மிகப்பெரிய சவால்’ ... ஜி.எஸ்.டி., தாக்கம் விரைவில் மறையும்; தேசிய பொருளாதாரம் மறு எழுச்சி காணும் ஜி.எஸ்.டி., தாக்கம் விரைவில் மறையும்; தேசிய பொருளாதாரம் மறு எழுச்சி காணும் ...
‘தேசிய வளர்ச்சிக்கு உதவும் 3 துறைகள்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2017
00:18

புதுடில்லி : ‘‘நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, உரம், மருந்து, ரசா­ய­னம் மற்­றும் பெட்ரோ ரசா­யன துறை­கள், முக்­கிய பங்கு வகித்து வரு­கின்றன; இத்­து­றை­களின் ஒட்­டு­மொத்த விற்­று­மு­தல், 13.5 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது,’’ என, மத்­திய ரசா­ய­னம் மற்­றும் உரத்­துறை அமைச்­சர், அனந்த குமார் தெரி­வித்து உள்­ளார்.

அவர், மேலும் கூறி­ய­தா­வது: உரம் மற்­றும் மருந்து துறை­கள், முறையே, 18.67 சத­வீ­தம் மற்­றும் 13.5 சத­வீத வளர்ச்­சியை கண்டு வரு­கின்றன. ரசா­ய­னம் மற்­றும் பெட்ரோ ரசா­யன துறை­யின் வளர்ச்சி, 11 – 12 சத­வீ­த­மாக உள்­ளது. இந்த மூன்று துறை­களும், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, மிக முக்­கிய பங்­காற்றி வரு­கின்றன. இத்­து­றை­களின் விற்­று­மு­தல், 13.5 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது; கோடிக்­க­ணக்­கான வேலை­வாய்ப்­பு­களை, இத்­து­றை­கள் உரு­வாக்கி உள்ளன.

மூன்று ஆண்­டு­களில், 1,100 மருந்­து­களின் விலை­கள் குறைக்­கப்­பட்டு உள்ளன. இதய நோயா­ளி­க­ளுக்­கான, ‘ஸ்டென்ட்’ கரு­வி­கள், மூட்டு மாற்று உறுப்­பு­கள் ஆகி­ய­வற்­றின் விலை கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. மக்­க­ளுக்கு மலிவு விலை­யில் மருந்­து­கள் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கில், 2,400 ‘ஆஷாதி மருந்து நிலை­யங்­கள்’ திறக்­கப்­பட்டு உள்ளன.

உரத்­து­றை­யில், 100 சத­வீத வேம்பு பூசிய யூரியா அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. விவ­சா­யி­க­ளுக்கு தட்­டுப்­பா­டில்­லா­மல், யூரியா மற்­றும் இதர ஊட்­டச்­சத்து உரங்­கள் கிடைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது. மேலும், யூரியா உற்­பத்­தியை அதி­க­ரித்து, பயிர் ஊட்­டச்­சத்­து­கள் விலை குறைக்­கப்­பட்டு உள்­ளது.

உரத்­து­றை­யில், நேரடி மானிய திட்­டத்­தின் கீழ், முதற்­கட்ட நடை­முறை அறி­மு­க­மாகி உள்­ளது. மூடப்­பட்ட ஐந்து உர தொழிற்­சா­லை­களை திறக்க, நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)