‘தேசிய வளர்ச்சிக்கு உதவும் 3 துறைகள்’ ‘தேசிய வளர்ச்சிக்கு உதவும் 3 துறைகள்’ ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.04 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.04 ...
ஜி.எஸ்.டி., தாக்கம் விரைவில் மறையும்; தேசிய பொருளாதாரம் மறு எழுச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2017
00:21

புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­தால் ஏற்­பட்ட தாக்­கம் மறைந்து, நாட்­டின் பொரு­ளா­தா­ரம், விரை­வில் மறு எழுச்சி காணும்’ என, நிதிச் சேவை­கள் நிறு­வ­ன­மான, ‘மார்­கன் ஸ்டான்லி’ நம்­பிக்கை தெரி­வித்து உள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: கடந்த ஆண்டு, நவம்­ப­ரில் மேற்­கொள்­ளப்­பட்ட பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, தொழில் துறை உற்­பத்­தி­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இதை­ய­டுத்து, மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் மேற்­கொண்ட முயற்­சி­யால், பணப்­பு­ழக்­கம் அதி­க­ரித்து, இயல்பு நிலை திரும்­பி­யது. இந்த பாதிப்­பின் தாக்­கத்­தில் இருந்து மீண்டு வரும் நிலை­யில், ஜூலை­யில், ஜி.எஸ்.டி., அறி­மு­க­மா­னது.

இத­னால் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண சூழல், குறிப்­பாக, தயா­ரிப்­புத் துறை­யில் ஏற்­பட்­டுள்ள சுணக்­கம் கார­ண­மாக, நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், ஏப்., – ஜூன் வரை­யி­லான காலாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 5.7 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இதை மட்­டுமே வைத்து, முழு நிதி­யாண்­டின் வளர்ச்­சியை எடை போட முடி­யாது. அதிக வளர்ச்சி வாய்ப்­புள்ள துறை­களில், அடி­மட்­டத்­தில் தேவைப்­பாடு அதி­க­ரித்து வரு­வது, ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது. இதன் மூலம், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி குறித்த, சமீ­பத்­திய புள்ளி விப­ரங்­க­ளுக்கு, நேர் எதி­ரான போக்கு உரு­வாகி வரு­வதை புரிந்து கொள்­ள­லாம்.

அத­ன­டிப்­ப­டை­யில், மதிப்­பீட்டு காலாண்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியை விட, 2 சத­வீ­தம் கூடு­த­லான வளர்ச்­சியை, 2018 ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்­டில், காண முடி­யும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது. நடப்பு நிதி­யாண்­டின் நான்­கா­வது காலாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7.5 சத­வீ­த­மாக உய­ரும் என, கணிக்­கப்­பட்டு உள்­ளது. மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 2017 மற்­றும் 2018ம் ஆண்­டு­களில், முறையே, 7.6 மற்­றும் 8 சத­வீ­த­மாக இருக்­கும் என, தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், ஜி.எஸ்.டி., தாக்­கம் கார­ண­மாக, இந்த வளர்ச்சி, முறையே, 6.4 மற்­றும் 7.4 சத­வீ­த­மாக குறைத்து நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. இதை­ய­டுத்து, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, நடப்பு நிதி­யாண்­டில், 6.7 சத­வீ­தம்; வரும் நிதி­யாண்­டில், 7.5 சத­வீ­த­மாக இருக்­கும் என, மறு­ம­திப்­பீடு செய்­யப்­பட்டு உள்­ளது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை; ஜி.எஸ்.டி., அம­லாக்­கம் ஆகி­ய­வற்­றின் கார­ண­மா­கவே, நாட்­டின் வளர்ச்சி வேகம் மந்­த­ம­டைந்து உள்­ளது. இது, ஏற்­க­னவே எதிர்­பார்க்­கப்­பட்­டது தான்.

அதே சம­யம், பொரு­ளா­தார வளர்ச்­சி­யின் அடிப்­படை கார­ணி­களில் ஒன்­றாக உள்ள, மக்­களின் தேவைப்­பாடு, குறை­வின்றி பெருகி வரு­வது ஆறு­தல் அளிக்­கிறது. நாட்­டின் பொரு­ளா­தா­ரம் சுணக்க நிலை­யில் இருந்து மீண்டு, மறு எழுச்சி காணும் என்ற நம்­பிக்­கையை விதைத்­துள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

முன்னேற்றம்:
உற்­பத்தி வளர்ச்­சி­யில், இந்­தியா, அடுத்­த­கட்ட நகர்வை நோக்கி முன்­னே­றிக் கொண்­டி­ருக்­கிறது. இது, நிலை­யான, நீடித்த பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு துணை புரி­யும்.
-‘மார்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)