365 நாட்கள், 13 கோடி வாடிக்கையாளர்கள்: ஜியோ புதிய சாதனை365 நாட்கள், 13 கோடி வாடிக்கையாளர்கள்: ஜியோ புதிய சாதனை ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மீண்டும் உயர்வு மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மீண்டும் உயர்வு ...
அடுத்த ஆண்டு முதல் 5ஜி சோதனை செய்ய பி.எஸ்.என்.எல். திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2017
16:14

புதுடில்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 5ஜி சேவைகளுக்கான சோதனை இந்த நிதியாண்டிற்குள் துவங்கும் என அந்நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
'நோக்கியா நிறுவனத்துடன் 5ஜி சேவைகள் சார்ந்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது. அடுத்த எங்களது தேவைகள் மற்றும் சோதனை சார்ந்த பணிகளை வழங்க இருக்கிறோம். இந்த பணிகள் இந்த நிதியாண்டின் இறுதியில் துவங்கலாம்.' என அனுபவம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இறுதி சேவைகளுக்கான தேவைகளை பெற லார்சன் மற்றும் டூர்போ மற்றும் எச்பி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளது. கொரியன்ட் நிறுவனத்துடன் 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் கொரியன்ட் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் நெட்வொர்க் கட்டமைப்பு மற்றும் சேவையில் புது அம்சங்களை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 5ஜி சார்ந்து அதிகப்படியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். 5ஜி நெட்வொர்க் வேகம் 4ஜி-யை விட அதிகமாக இருக்கும் எனினும் 4ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்-ஐ விட ஆப்டிமைஸ் செய்யப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் மிகப்பெரிய ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் பி.எஸ்.என்.எல். வசம் இருக்கிறது, இதனை கொண்டு அதிவேக டேட்டா வழங்க முடியும். மேலும் இந்த தொழில்நுட்பம் கொண்டு ஏழு லட்சம் கிலோமீட்டர் வரை இணைய சேவை வழங்க முடியும்.
5ஜி தொழில்நுட்பத்தின் அனுபவம் மற்றும் நெட்வொர்க் அமைப்பு குறித்து கொரியன்ட் நிறுவனம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வோம் என கொரியன்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷக்யான் கெராட்பிர் தெரிவித்துள்ளார்.
ரியல்-டைம் போக்குவரத்து குறித்து ஒவ்வொரு நொடியும் வேகமாக செயல்படும் தாணியங்கி கார்களின் சென்சார்களை போன்றே 5ஜி சேவை ரியல்-டைம் கம்ப்யூட்டிங் போன்று வேகமாக செயல்படும். நெட்வொர்க் அமைப்புகளை கட்டமைத்து, அவற்றில் இருந்து டேட்டாவினை பரிமாற்றம் செய்வது குறித்து எங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வோம். என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)