பதிவு செய்த நாள்
07 செப்2017
16:14
புதுடில்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 5ஜி சேவைகளுக்கான சோதனை இந்த நிதியாண்டிற்குள் துவங்கும் என அந்நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
'நோக்கியா நிறுவனத்துடன் 5ஜி சேவைகள் சார்ந்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது. அடுத்த எங்களது தேவைகள் மற்றும் சோதனை சார்ந்த பணிகளை வழங்க இருக்கிறோம். இந்த பணிகள் இந்த நிதியாண்டின் இறுதியில் துவங்கலாம்.' என அனுபவம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இறுதி சேவைகளுக்கான தேவைகளை பெற லார்சன் மற்றும் டூர்போ மற்றும் எச்பி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளது. கொரியன்ட் நிறுவனத்துடன் 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் கொரியன்ட் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் நெட்வொர்க் கட்டமைப்பு மற்றும் சேவையில் புது அம்சங்களை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 5ஜி சார்ந்து அதிகப்படியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். 5ஜி நெட்வொர்க் வேகம் 4ஜி-யை விட அதிகமாக இருக்கும் எனினும் 4ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்-ஐ விட ஆப்டிமைஸ் செய்யப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் மிகப்பெரிய ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் பி.எஸ்.என்.எல். வசம் இருக்கிறது, இதனை கொண்டு அதிவேக டேட்டா வழங்க முடியும். மேலும் இந்த தொழில்நுட்பம் கொண்டு ஏழு லட்சம் கிலோமீட்டர் வரை இணைய சேவை வழங்க முடியும்.
5ஜி தொழில்நுட்பத்தின் அனுபவம் மற்றும் நெட்வொர்க் அமைப்பு குறித்து கொரியன்ட் நிறுவனம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வோம் என கொரியன்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷக்யான் கெராட்பிர் தெரிவித்துள்ளார்.
ரியல்-டைம் போக்குவரத்து குறித்து ஒவ்வொரு நொடியும் வேகமாக செயல்படும் தாணியங்கி கார்களின் சென்சார்களை போன்றே 5ஜி சேவை ரியல்-டைம் கம்ப்யூட்டிங் போன்று வேகமாக செயல்படும். நெட்வொர்க் அமைப்புகளை கட்டமைத்து, அவற்றில் இருந்து டேட்டாவினை பரிமாற்றம் செய்வது குறித்து எங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வோம். என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|