பதிவு செய்த நாள்
10 செப்2017
03:19
சென்னை : ‘டாபே’ நிறுவனத்தின் தலைவர், மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு, உலகளாவிய வேளாண்மை, இயந்திரங்கள், வணிகத் தொழில் மற்றும் கல்வித் துறைக்கு, அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.டிராக்டர் மற்றும் விவசாய சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான, டாபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு, கோவையில் உள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், ‘டாக்டர் ஆப் சயின்ஸ்’ பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது. பட்டமளிப்பு விழாவில், தமிழக பொறுப்பு கவர்னர், வித்யாசாகர் ராவ், டாக்டர் பட்டத்தை வழங்கினார்.டாக்டர் பட்டம் பெற்ற, மல்லிகா ஸ்ரீனிவாசன் பேசுகையில், ‘‘100 ஆண்டுகளுக்கு மேல், விவசாய சமூகத்துக்கு சேவையாற்றி வரும் இந்த பல்கலைக் கழகத்திலிருந்து, டாக்டர் பட்டத்தை பெறுவதில்,நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ‘‘பல்கலைக் கழகத்துக்கு, என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிலும், உலகின் மற்ற வளர்ந்து வரும் நாடுகளிலும், தொடர்ந்து சேவையாற்றுவதற்கு, இந்த கவுரவ பட்டம் எனக்கும், டாபே நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும், பெரும் உந்துதலாக இருக்கும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|