பதிவு செய்த நாள்
10 செப்2017
23:58
முதலீடு குறித்த புத்தகமாக இருந்தாலும், முதலீடு தொடர்பான பழக்கம் மற்றும் அணுகுமுறை குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது, ‘மெயர் ஸ்டேட்மன்’ எழுதியுள்ள, ‘வாட் இன்வெஸ்ட்டர்ஸ் ரியலி வான்ட்’ புத்தகம். இதன் அறிமுக பகுதியில், முதலீடு பழக்கம் தொடர்பான, சராசரி மனநிலையை அழகாக விவரிக்கிறார்:
முதலீடு மூலம், அதனால் வரும், அதிக பலனோடு, பணக்காரராக வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறவும், வறுமையில் இருந்து விடுபடவும் மேலும் பலவற்றை எதிர்ப்பார்க்கிறோம். நாம் முன்னிலை பெற்று, சந்தையை மிஞ்சவும் நாம் விரும்புகிறோம்.நமக்கு சம்பளம் தவிர, பலவித பலன்கள் பணியின் மூலம் கிடைப்பது போன்றே, முதலீடு மூலமும், பணத்தை தவிர வேறு பல பலன்கள் கிடைக்கின்றன.விளையாட்டில் பங்கேற்கும் ஆர்வம் மற்றும் வெற்றியின் திருப்தி, நம்மை இயக்குவது போலவே, முதலீட்டிலும், உணர்வுகள் நம்மை இயக்குகின்றன. நல்லவிதமான உணர்வுகள் நம்பிக்கை மற்றும் பெருமிதத்தை அளிக்கின்றன.
எதிர்மறை உணர்வுகள் அச்சம், வருத்தம் மற்றும் பின் வாங்கும் தன்மையை அளிக்கின்றன. ஆனால் வருத்தம் கொள்வது நமக்கு வருங்கால பாடங்கள் அளிக்க கூடியது.நமக்கும் கம்ப்யூட்டருக்குமான முக்கிய வேறுபாடு இருக்கிறது. கம்ப்யூட்டருக்கு எதுவும் தேவையில்லை; அது கட்டளைகளை நிறைவேற்றுகிறது. அவைகள் உணர்வுகளால் பாதிக்கப்படுவதில்லை.மளிகை கடையில் கணக்கு போடும் போது, பொருட்களின் விலையை, பட்டியல் போடும் போதே, அவற்றின் கூட்டுத்தொகை அறிய முயல்வதில்லை. ஆனால் நாம், முன் கூட்டியே கணித்து செயல்பட முயற்சிக்கிறோம். இவை நல்ல பலனையும் தரலாம். மோசமான பலனையும் தரலாம்.
நம்முடைய முதலீட்டு தேவைகளை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால், முதலீடு மூலம் நாம் விரும்பும் விஷயங்கள், நம்மை தவறான முடிவெடுக்க துாண்டுகின்றன. முதலீடு என்பது பலன் மற்றும் அதற்கான, ‘ரிஸ்க்’ ஆகியவற்றை கொண்டது. முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினர், ரிஸ்கிற்கு ஏற்ற பலனை பெற விரும்புகின்றனர். ரிஸ்க் குறைவாகவும், பலன் அதிகமாகவும் இருக்க வேண்டும் எனும் அணுகுமுறையை அவர்கள் பின்பற்றுகின்றனர்.இன்னொரு பிரிவினர், ரிஸ்கை விட அதிக அளவிலான பலனை பெற விரும்புகின்றனர். அதற்காக உழைத்து, ஆய்வு செய்து, வெற்றிகரமான உத்திகளை கண்டுபிடிக்கவும் தயாராக இருக்கின்றனர்.
சந்தையை மிஞ்சிய லாபம் பெற நினைப்பவர்கள், வெற்றி பெறும் போது, தங்களால் வெற்றிகரமான பங்குகளை தேர்வு செய்ய முடியும் எனும் நம்பிக்கை கொள்கின்றனர். இது அளவுக்கு அதிகமாகும் போது, தங்களால் வெற்றிகரமான உத்திகளை கண்டறிய முடியும் எனும் நம்பிக்கை பாதிப்பை உண்டாக்குகிறது.ரிஸ்க்கை விட கூடுதலான பலன் வேண்டும் எனும் எதிர்பார்ப்பே, நிதி மோசடிகளுக்கு பலியாக வைக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|