கைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சிகைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் நிர்­வாகம் எனும் கலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2017
00:06

கடன் தொடர்­பாக, பர­வ­லாக பலரும் கொண்­டுள்ள கருத்­துக்­க­ளுக்கு மாறாக, கடன் நிர்­வாகம் மூலம் செல்­வத்தை உரு­வாக்கி கொள்­வது எனும் கருத்­தாக்­கத்தை, ‘தி வேல்யூ ஆப் டெப்ட்’ புத்­த­கத்தில் தாமஸ் ஆண்­டர்சன் விவ­ரிக்­கிறார். தனி­நபர் மற்றும் குடும்ப வளத்தை உரு­வாக்­கு­வதில் கட­னுக்கு முக்­கிய பங்­கி­ருக்­கி­றது. அனேகமாக எல்லா நிறு­வ­னங்­களும், சொத்­துக்கள் மற்றும் கடன்கள் என இரண்­டிலும் கவனம் செலுத்தி, ஏற்­கத்­தக்க கடன் விகி­தத்தை அடைய முயற்­சிக்­கின்­றன. அதே நேரத்தில் பெரும்­பா­லான தனி­ந­பர்கள் ஒன்று அதிக கடன் பெற்­றுள்­ளனர். அல்­லது குறை­வான கடன் பெற்­றுள்­ளனர்.

தனி நபர்கள் கடனி­லி­ருந்து விடு­பட வேண்டும் எனும் எண்ணம் கொண்­டுள்­ளனர். ஆனால் ஒவ்­வொரு நிறு­வ­னமும், கடனின் மதிப்பை உணர்ந்­துள்­ளன. சரி­யான கடன் விகி­தத்தை நாடு­கின்­றன. கடனை சரி­யாக நிர்­வ­கிப்­பதன் மூலம், இவை தங்­க­ளுக்கு உள்ள ஆற்­றலை சிறப்­பாக பயன்­ப­டுத்திக் கொள்­கின்­றன. கடன் தொடர்­பாக, ஒட்­டு­மொத்த நோக்­கிலான விரி­வான பார்வை தேவை. அதை குறு­கிய கண்­ணோட்­டத்தில் பார்க்கக் கூடாது. முக்­கி­ய­மாக சொத்­துக்கள் மற்றும் கடன் இரண்­டையும் சேர்த்து பார்ப்­பது அவ­சியம். தேவைகள், இலக்­குகள், கன­வுகள் ஆகி­ய­வற்றை மனதில் கொண்டு, தற்­போ­தைய நிதி நிலை, வளம், வரிகள், ஓய்­வு­கால திட்­ட­மிடல் என எல்­லா­வற்­றையும், இது கணக்கில் எடுத்துக் கொள்­கி­றது.

தனி­ந­பர்­களும் ஒரு நிறு­வனம் போல நினைத்துக் கொண்டு செயல்­பட வேண்டும். நிறு­வ­னங்கள் பொது­வாக லாபத்தில் கவனம் செலுத்­து­கின்­றன. நிறு­வ­னங்­களும், குடும்­பங்­களும் அடிப்­ப­டையில் வேறா­னவை என்­றாலும், நிறு­வ­னங்கள் செயல்­படும் விதத்தில் இருந்து, நிறைய கற்றுக் கொள்­ளலாம். தனி­ந­பர்கள் நிறு­வனம் போல லாபத்தை முதன்­மை­யாக கொண்டு செயல்­படா விட்­டாலும், நிதி ஆதா­ரங்­களை நிர்­வ­கிப்­ப­தற்­கான வழி­மு­றை­களை அறிந்­தி­ருக்க வேண்டும். இவை தவிர கடன் தொடர்­பாக பர­வ­லாக நிலவும் கருத்­துக்­களின் குறை­பா­டு­களை உணர வேண்டும். உங்­க­ளுக்கு ஏற்ற கடன் விகி­தத்தை அடைய முயற்­சிக்க வேண்டும். மேலும் திறந்த மன­துடன் செயல்­பட்டு, கேள்­வி­களை எழுப்பி, செயல்­படும் வழி­மு­றை­களை கண்­ட­றிய வேண்டும்.

இந்த உத்­தி­களை செயல்­ப­டுத்த அடிப்­ப­டையில், நிதி இன்­னல்கள் மற்றும் அதற்­கான விலையை புரிந்து கொள்ள வேண்டும், நிதி இன்னல் என்­பது, நிதி பொறுப்­புகளை நிறை­வேற்ற முடி­யாமல், தடு­மாறும் நிலையை குறிக்கும். நிதி இன்­ன­லுக்கு நேரடி மற்றும் மறை­முக பாதிப்பு உண்டு. பணப்­பு­ழக்­கத்தை அதி­க­மாக்­கு­வது, நிதி இன்­னல்கள் பாதிப்பை குறைப்­ப­தற்­கான வழி­களை கண்­ட­றி­வது, சரி­யான நேரத்தில் வளத்தை பெருக்கி கொள்­வது மற்றும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்ளும் ஆற்­றலை பெறு­வதன் மூலம், நிதி இன்­னல்­களை சமா­ளிக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)