பதிவு செய்த நாள்
18 செப்2017
00:06
கடன் தொடர்பாக, பரவலாக பலரும் கொண்டுள்ள கருத்துக்களுக்கு மாறாக, கடன் நிர்வாகம் மூலம் செல்வத்தை உருவாக்கி கொள்வது எனும் கருத்தாக்கத்தை, ‘தி வேல்யூ ஆப் டெப்ட்’ புத்தகத்தில் தாமஸ் ஆண்டர்சன் விவரிக்கிறார். தனிநபர் மற்றும் குடும்ப வளத்தை உருவாக்குவதில் கடனுக்கு முக்கிய பங்கிருக்கிறது. அனேகமாக எல்லா நிறுவனங்களும், சொத்துக்கள் மற்றும் கடன்கள் என இரண்டிலும் கவனம் செலுத்தி, ஏற்கத்தக்க கடன் விகிதத்தை அடைய முயற்சிக்கின்றன. அதே நேரத்தில் பெரும்பாலான தனிநபர்கள் ஒன்று அதிக கடன் பெற்றுள்ளனர். அல்லது குறைவான கடன் பெற்றுள்ளனர்.
தனி நபர்கள் கடனிலிருந்து விடுபட வேண்டும் எனும் எண்ணம் கொண்டுள்ளனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும், கடனின் மதிப்பை உணர்ந்துள்ளன. சரியான கடன் விகிதத்தை நாடுகின்றன. கடனை சரியாக நிர்வகிப்பதன் மூலம், இவை தங்களுக்கு உள்ள ஆற்றலை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. கடன் தொடர்பாக, ஒட்டுமொத்த நோக்கிலான விரிவான பார்வை தேவை. அதை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. முக்கியமாக சொத்துக்கள் மற்றும் கடன் இரண்டையும் சேர்த்து பார்ப்பது அவசியம். தேவைகள், இலக்குகள், கனவுகள் ஆகியவற்றை மனதில் கொண்டு, தற்போதைய நிதி நிலை, வளம், வரிகள், ஓய்வுகால திட்டமிடல் என எல்லாவற்றையும், இது கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
தனிநபர்களும் ஒரு நிறுவனம் போல நினைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். நிறுவனங்கள் பொதுவாக லாபத்தில் கவனம் செலுத்துகின்றன. நிறுவனங்களும், குடும்பங்களும் அடிப்படையில் வேறானவை என்றாலும், நிறுவனங்கள் செயல்படும் விதத்தில் இருந்து, நிறைய கற்றுக் கொள்ளலாம். தனிநபர்கள் நிறுவனம் போல லாபத்தை முதன்மையாக கொண்டு செயல்படா விட்டாலும், நிதி ஆதாரங்களை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். இவை தவிர கடன் தொடர்பாக பரவலாக நிலவும் கருத்துக்களின் குறைபாடுகளை உணர வேண்டும். உங்களுக்கு ஏற்ற கடன் விகிதத்தை அடைய முயற்சிக்க வேண்டும். மேலும் திறந்த மனதுடன் செயல்பட்டு, கேள்விகளை எழுப்பி, செயல்படும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
இந்த உத்திகளை செயல்படுத்த அடிப்படையில், நிதி இன்னல்கள் மற்றும் அதற்கான விலையை புரிந்து கொள்ள வேண்டும், நிதி இன்னல் என்பது, நிதி பொறுப்புகளை நிறைவேற்ற முடியாமல், தடுமாறும் நிலையை குறிக்கும். நிதி இன்னலுக்கு நேரடி மற்றும் மறைமுக பாதிப்பு உண்டு. பணப்புழக்கத்தை அதிகமாக்குவது, நிதி இன்னல்கள் பாதிப்பை குறைப்பதற்கான வழிகளை கண்டறிவது, சரியான நேரத்தில் வளத்தை பெருக்கி கொள்வது மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலை பெறுவதன் மூலம், நிதி இன்னல்களை சமாளிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|