பதிவு செய்த நாள்
18 செப்2017
00:07
தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்.,ல் இணைவதற்கான வயது வரம்பை, 65 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, பி.எப்.அர்.டி.ஏ., அமைப்பால் நிர்வகிக்கப்படும், என்.பி.எஸ்., திட்டத்தில் தற்போது 60 வயது வரை இணையலாம்.இந்த வயது வரம்பை, 65 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. 70 வயது வரை தொடர்ந்து திட்டத்தில் பங்களிப்பு செலுத்தலாம். வர்த்தக நிறுவனங்களில், பி.எப்., கணக்கு வைத்திருப்பவர்கள், என்.பி.எஸ்., வாய்ப்பையும் கூடுதலாக பரிசீலிக்கலாம் என, பென்ஷன் நிதி ஆணைய தலைவர் ஹேமந்த் கண்டாக்டர் கூறியுள்ளார்.
பணி மாறுவது அதிகரித்து வரும் நிலையில், ஓய்வூதிய நிதியை கட்டுப்படுத்துவதில், என்.பி.எஸ்., திட்டம் அதிக வாய்ப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஓய்வு வயதிற்கு பின்னும் பணி புரியும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையில், என்.பி.எஸ்., திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டு இருப்பது பலன் தரும் என கருதப்படுகிறது. என்.பி.எஸ்., திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பரவலாக அதிகரித்து வரும் நிலையில், இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|