பதிவு செய்த நாள்
18 செப்2017
00:09
வங்கிச் சேவை உள்ளிட்ட பல முக்கிய சேவை கணக்குகளை, ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம். இவற்றை நிறைவேற்றுவதற்கான கால கெடுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், குறிப்பிட்ட சேவைகளை தொடர்ந்து பெறுவது சிக்கலாகலாம் என்பதால், ஆதார் இணைப்புக்கான கால கெடுவை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் முக்கிய சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு காலம் பற்றிய விபரம்:
ஆதார் – பான் கார்டு:
ஜூலை 1ம் தேதிக்கு பின் செய்யப்படும் வருமான வரி கணக்கு தாக்கல் விபரங்கள், பான் கார்டு எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஏற்கப்படும் என, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், ஆதார் எண் இணைப்பு தொடர்பாக, பலரும் சிக்கல் இருப்பதாக கூறியதை அடுத்து, இதற்கான அவகாசம், ஆக., 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின் இந்த கெடு டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கான சில பிரிவினரைத் தவிர, பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. எனினும், இந்த கெடு இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்கு கெடு அறிவிக்கப்படவில்லை.
நிதிச் சேவைகள்:
வங்கிகள், நிதிச்சேவை நிறுவனங்கள் மற்றும் வினியோக அமைப்புகள் ஆகியவை, வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி., தகவல்களை புதிய விதிமுறைக்கு ஏற்ப பெற்றிருக்க வேண்டும். இதில் ஆதார் எண்ணும் அடங்கும். புதிய விதிமுறைகளின் படி, கே.ஒய்.சி., தகவல்களை பூர்த்தி செய்ய பான் கார்டு மற்றும் ஆதார் எண்களை கட்டாயம் அளிக்க வேண்டும். இதற்கான கால கெடு டிசம்பர் 31ம் தேதி ஆகும். வங்கிகள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், பங்குகள், என்.பி.எஸ்., திட்டம் உள்ளிட்டவற்றில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
மொபைல் போன்கள்:
தொலைத்தொடர்புத் துறை மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு பிப்., 6ம் தேதிக்குள் இதை நிறைவேற்ற வேண்டும். இதே போன்று சமையல், ‘காஸ்’ மானியம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் பயனை தொடர்ந்து பெறவும், ஆதார் எண் இணைப்பு அவசியம். இதற்கான கடைசித் தேதி டிசம்பர் 31.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|