பதிவு செய்த நாள்
19 செப்2017
05:07
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’ ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும், தலைமை பொருளாதார வல்லுனர் நியமனத்திற்கு, தகுதியான நபரை தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளது.
இந்த ஆணையத்தில் தற்போது, பொருளாதார கொள்கை மற்றும் ஆய்வுக்காக, தனி குழு இயங்கி வருகிறது. இக்குழு, பங்குச் சந்தை தொடர்பான அனைத்து புள்ளி விபரங்களையும் தொகுத்து, ஆணையத்தின் மாத இதழில் வெளியிடுகிறது. இத்துடன், ஆண்டறிக்கை, நாட்டின் பொருளாதார மதிப்பீடு, நிதிச் சந்தைகள் நிலவரம் உள்ளிட்டவற்றின் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
இக்குழுவின் ஆற்றலை, மேலும் முழுமையாக பயன்படுத்தி, பல்வேறு நிதித் துறை கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து, பரந்த பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ள, ‘செபி’ திட்டமிட்டு உள்ளது. இதற்காக, தலைமை பொருளாதார ஆலோசகர் ஒருவரை நியமிக்க உள்ளது. ஏற்கனவே, 2011ல், இது போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு, கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|