பதிவு செய்த நாள்
19 செப்2017
05:10
புதுடில்லி : ‘ஜியோ, ஏர்டெல்’ ஆகியவற்றை தொடர்ந்து, பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், மைக்ரோமேக்ஸ், லாவா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, குறைந்தபட்சம், 2,000 ரூபாய் விலையில், மொபைல் போனை வெளியிட உள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தலைவர் அனுபம் ஸ்ரீவத்ஸவா கூறியதாவது: நாங்கள், மைக்ரோமேக்ஸ், லாவா நிறுவனங்களுடன் இணைந்து, சொந்த மாடல்களில், தொலை தொடர்பு சேவையுடன் கூடிய மொபைல் போன்களை, அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த மொபைல் போன்களின் குறைந்தபட்ச விலை, 2,000 ரூபாயாக இருக்கும். இவை, இலவச அழைப்புகள் வசதியுடன் கிடைக்கும்.
அக்டோபரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். இதை தொடர்ந்து, மேலும் பல மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து, தொலை தொடர்பு வசதியுடன் கூடிய மொபைல் போன்களை வெளியிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பி.எஸ்.என்.எல்., 10.5 கோடி மொபைல் போன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|