பதிவு செய்த நாள்
19 செப்2017
05:11
புதுடில்லி : எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ் ஆகிய நிறுவனங்கள், இந்த வாரம், பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.
எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 8,400 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. பங்கு வெளியீடு, செப்., 20 – 22 வரை நடைபெறுகிறது. பங்கு வெளியீட்டில், 12 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். இதில், எஸ்.பி.ஐ.,யின், எட்டு கோடி பங்குகளும், பி.என்.பி., பாரிபாஸ் கார்டிப் நிறுவனத்தின், நான்கு கோடி பங்குகளும் அடங்கும். ஒரு பங்கின் விலை, 685 – 700 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனம், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை தயாரித்து வருகிறது. பங்கு வெளியீடு வாயிலாக, நிறுவனம், 482 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, செப்., 22 – 26 வரை நடைபெறுகிறது. இதன் மூலம், நிறுவனத்தின், ‘சிப்ஸ்’ தொழிற்சாலையின் உற்பத்தியை, 50 சதவீதம் அதிகரிக்கவும், இதர தின்பண்டங்களின் உற்பத்தியை இரு மடங்கு உயர்த்தவும் உள்ளது. ஒரு பங்கின் விலை, 930 – 938 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|