டாடா மோட்டார்ஸ் பங்குகளை டாடா சன்ஸ் வாங்க திட்டம்டாடா மோட்டார்ஸ் பங்குகளை டாடா சன்ஸ் வாங்க திட்டம் ... ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.38 ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.38 ...
பங்கு விற்பனைக்கு தயாராகும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்: நிதின் கட்கரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2017
02:46

மும்பை : ‘‘தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யம், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க, மத்­திய நிதி அமைச்­ச­கத்­தின் ஒப்­பு­தலை எதிர்­நோக்கி உள்­ளது,’’ என, மத்­திய சாலை, நெடுஞ்­சா­லை­கள் மற்­றும் கப்­பல் போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர், நிதின் கட்­கரி தெரி­வித்து உள்­ளார்.

அவர், மும்­பை­யில், இந்­திய – அமெ­ரிக்க வர்த்­தக கூட்­ட­மைப்­பின் கூட்­டத்­தில், மேலும் பேசி­ய­தா­வது: பொதுத் துறை­யைச் சேர்ந்த, தேசிய நெடுஞ்­சா­லை­கள் ஆணை­யம், பங்கு வெளி­யீட்­டுக்கு ஆயத்­த­மாகி வரு­கிறது. மத்­திய நிதி அமைச்­ச­கத்­தின் கீழ் உள்ள, முத­லீடு மற்­றும் பொது சொத்து நிர்­வா­கத் துறை­யின் அனு­மதி கிடைத்த உடன், பங்கு வெளி­யீடு குறித்த விப­ரங்­கள் வெளி­யி­டப்­படும்.

தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யத்­திற்கு, பங்கு விற்­பனை மூலம், 10 லட்சம் கோடி ரூபாய் திரட்­டும் ஆற்­றல் உள்­ளது. போது­மான நிதி உள்­ள­தால், வங்­கி­களை நாடா­மல், இ.பி.சி., முறை­யில், திட்­டப் பணி­களை தனி­யா­ரி­டம் அளித்து, முடித்­துக் கொள்ள முடி­யும். இந்த முறை­யில், மும்பை – வதோ­தரா இடையே, 44 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­பி­லான, அதி­வி­ரைவு நெடுஞ்­சாலை திட்­டம் நடக்­கிறது. தேசிய நெடுஞ்­சா­லை­களில், ஒரு­முறை பணம் செலுத்தி, சுங்­கச்­சா­வ­டி­கள் அமைத்து, பரா­ம­ரித்து, திரும்­ப­வும் ஒப்­ப­டைக்­கும் திட்­டம், ஆறு மாதங்­களில் துவங்­கும். அடுத்த ஒரு மாதத்­தில், இதற்­கான, முன்­னோட்ட திட்­டம் துவக்­கப்­பட உள்­ளது.

வாகன விற்­ப­னை­யில், தற்­போ­துள்ள வளர்ச்சி நீடித்­தால், மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை, அரசு, 80 ஆயி­ரம் கோடி ரூபாய் செல­வில், 2 லட்­சம் கி.மீ., தேசிய நெடுஞ்­சா­லையை, கூடு­த­லாக அமைக்க வேண்­டும். கிரா­மப்­பு­றங்­களை இணைக்­கும் வகை­யில், 8 லட்­சம் கோடி ரூபாய் செல­வில், 30 சாலை திட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­பட உள்ளன.இவற்­றில், ஐந்து திட்­டங்­கள், அடுத்த மூன்று மாதங்­களில் துவக்­கப்­படும். இது தொடர்­பாக, ஏற்­க­னவே, 5.60 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான, திட்­டப் பணி­க­ளுக்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்டு உள்­ளது.

சொகுசு கப்­பல் சுற்­றுலா திட்­டத்­திற்கு, அரசு பல சலு­கை­கள் வழங்­கி­யுள்ள போதி­லும், மிகக் குறைந்த நிறு­வ­னங்­களே, அதில் ஈடு­பட ஆர்­வம் தெரி­வித்து உள்ளன; அதற்­கான கார­ணம் தெரி­ய­வில்லை. நாட்­டின் முக்­கிய, 12 பெரிய துறை­மு­கங்­கள், கடந்த நிதி­யாண்­டில், 5,000 கோடி ரூபாய் லாபம் ஈட்­டி­யி­ருந்­தன; இது, நடப்பு நிதி­யாண்­டில், 7,000 கோடி ரூபா­யாக உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

‘தவறு செய்வோரை எனக்கு பிடிக்கும்’
வங்­கி­கள், ஒரு திட்­டத்­திற்கு கடன் தரு­வது குறித்து முடி­வெ­டுக்க, ஓராண்டு எடுத்­துக் கொள்­கின்றன. வாராக்­க­ட­னால், புதிய கடன்­களை வழங்­கு­வ­தி­லும் மெத்­த­ன­மாக உள்ளன. இத்­த­கைய போக்கை, வங்­கி­கள் மாற்­றிக் கொண்டு, திட்­டங்­கள் சார்ந்த உட­னடி கடன் என்ற புதிய அணு­கு­மு­றைக்கு மாற வேண்­டும். தவறு செய்­யும் மனி­தரை எனக்கு பிடிக்­கும்; ஆனால், எந்த முடி­வும் எடுக்க விரும்­பாத நேர்­மை­யான மனி­தரை, எனக்கு கொஞ்­சம் கூட பிடிக்­காது.-நிதின் கட்­கரி, மத்­திய அமைச்­சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)