பதிவு செய்த நாள்
26 செப்2017
00:19
புதுடில்லி : ‘‘அன்னிய செலாவணிக்கு நிகரான, ரூபாய் மதிப்பு உயர்வை கட்டுப்படுத்த, மூன்று மாதங்களாக, ரிசர்வ் வங்கி முயற்சி மேற்கொண்டு உள்ளது,’’ என, தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: மூலதனம் அதிகரித்து வருவதால், அன்னிய செலாவணிக்கு நிகரான, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. அனைத்து வளரும் நாடுகளும், இதே பிரச்னையை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு நாடும், அவற்றின் வர்த்தக கொள்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கின்றன. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வதை நிலைநிறுத்த, ரிசர்வ் வங்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. வரும் நாட்களில், கரன்சி மதிப்பில், அதிக ஏற்றத்தாழ்வு இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஓராண்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 5.3 சதவீதம் உயர்ந்துள்ளதால், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கடந்த வார இறுதியில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 64.79 ரூபாயாக உயர்ந்தது. இது, இவ்வாரத்தின் முதல் நாளான, நேற்று, 65.15 ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|