பதிவு செய்த நாள்
26 செப்2017
00:19
புதுடில்லி : ‘‘பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசின் கீழ், மூன்று ஆண்டுகளில், 95 மொபைல் போன் தொழிற்சாலைகள், உள்நாட்டில் உருவாகி உள்ளன,’’ என, மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: நாட்டில் இதுவரை, 95 மொபைல் போன் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதில், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில், 32 உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல் போன் தயாரிப்புக்கு, சிறந்த வர்த்தக மையமாக, இந்தியா உருவெடுத்து உள்ளது.
அமெரிக்காவின், சிலிக்கான் வேலியில், 51 சதவீத புதிய கண்டுபிடிப்புகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவை. இதில், இந்தியர்களின் பங்கு, 14 சதவீதமாக உள்ளது. இந்திய தொழில்நுட்ப மையத்தில் பட்டம் பெற்றவர்கள் மூலம், தினமும், 34 ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. அவர்கள், அமெரிக்காவில் பணியை விட்டுவிட்டு, இந்தியாவில் தொழில் துவங்குவதை விரும்புவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|