பதிவு செய்த நாள்
27 செப்2017
08:12
புதுடில்லி : இந்தாண்டு, ஜன., – ஆக., வரையிலான, எட்டு மாதங்களில், 74 ஆயிரத்து, 650 புதிய நிறுவனங்கள், கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆக., 31 நிலவரப்படி, பதிவு செய்த நிறுவனங்களின் எண்ணிக்கை, 16 லட்சத்து, 87 ஆயிரத்து, 745 ஆக உள்ளது. அதில், 5 லட்சத்து, 16 ஆயிரத்து, 565 நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. செயல்படாதவை பட்டியலில், 1,084 நிறுவனங்கள் உள்ளன. பதிவு செய்தவற்றில், 3.29 லட்சம் நிறுவனங்கள், வர்த்தக சேவைகள் துறையில் செயல்படுகின்றன. இப்பிரிவின் கீழ், தகவல் தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் மேம்பாடு, சட்டம், கணக்கு தணிக்கை, கணக்கு பராமரிப்பு, ஆலோசனை உள்ளிட்ட, இதர வர்த்தகங்கள் உள்ளன.
கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவற்றுள், தயாரிப்புத் துறையில், 2.34 லட்சம்; வர்த்தகத்தில் 1.52 லட்சம்; கட்டுமான துறையில், 1.04 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. பங்கு முதலீடு செய்துள்ள, 11.26 லட்சம் நிறுவனங்களில், தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை, 10.55 லட்சமாக உள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, 71 ஆயிரத்து, 762 நிறுவனங்களில், 64 ஆயிரத்து, 474 நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில், இன்னும் இடம்பெறவில்லை.
ஆகஸ்டில், 74 ஆயிரத்து, 650 புதிய நிறுவனங்கள், கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்தாண்டு, ஜன., – ஆக., வரையிலான, எட்டு மாதங்களில், மார்ச்சில், அதிகபட்சமாக, 11 ஆயிரத்து, 293 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆகஸ்டில், 9,413 நிறுவனங்கள் பதிவாகி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|