பதிவு செய்த நாள்
27 செப்2017
08:12
புதுடில்லி : மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில், மின் அடுப்புகளை தயாரிக்கும்படி, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தை, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
டில்லியில், நேற்று முன்தினம், அனைத்து வீடுகளுக்கும், மின் இணைப்பு வழங்கும், ‘சவுபாக்யா’ திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: குறைந்த மின் செலவில் இயங்கும் மின் அடுப்புகளை தயாரிக்க, பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., நிறுவனம் முன்வர வேண்டும். இதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும். உலகளவில், மின் கார் தயாரிக்கப்பட்டாலும், இந்தியாவில், மின் கார் மட்டுமல்லாமல், மின் அடுப்பையும் தயாரித்து, மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கும்; இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கும்படி, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். புதிதாக கட்டப்பட்டுள்ள, ஓ.என்.ஜி.சி., அலுவலகத்தை சுற்றிப் பார்த்து வியந்த பிரதமர், ‘‘நான் பிரதமரானதற்குப் பதிலாக, இங்கே வந்திருக்கலாம் என, நினைக்கிறேன்,’’ என, நகைச்சுவையாகப் பேசி, கலகலப்பூட்டினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|