பதிவு செய்த நாள்
27 செப்2017
08:13
ஆர்லண்டோ : இந்தியரான, சத்யா நாதெள்ளா, அமெரிக்காவின், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில், சி.இ.ஓ., ஆக உள்ளார். இவரின், ‘ஹிட் ரெப்ரஷ்’ எனும் நுால், அமெரிக்காவில் நேற்று வெளியானது.
அதில், நாதெள்ளா கூறியிருப்பதாவது: கடந்த, 1993ல், அனுவை திருமணம் செய்த பின், அவரை, அமெரிக்காவிற்கு அழைத்துக் கொள்ள தீர்மானித்தேன். ஆனால், அமெரிக்க சட்டத்தில், ‘கிரீன் கார்டு’ உள்ளவர்கள், வெளிநாட்டு மனைவியை அழைத்து வந்து, வசிக்க அனுமதியில்லை. அதனால், வேலையை உதறி விட்டு, இந்தியா திரும்ப நினைத்தேன்.
அப்போது, தற்காலிக பணிக்கான, ‘எச் 1 – பி’ விசாவில், துணையை அழைத்து வரலாம் என, தெரிய வந்தது. உடனே, கிரீன் கார்டை தந்து விட்டு, ‘எச் 1 – பி’ விசாவில், அனுவை அழைத்து வந்தேன். இது, மற்றவர்களுக்கு வியப்பை அளித்தது. அமெரிக்காவில், இந்த உதவாக்கரை சட்டம் இன்றும் இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|