பதிவு செய்த நாள்
27 செப்2017
16:30
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏழாவது நாளாக சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
ரூபாயின் மதிப்பு கடந்த சில தினங்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு மீண்டும் ரூ.65-ஐ எட்டியிருக்கிறது. இதன் காரணமாகவும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட இறக்கம், முன்னணி நிறுவன பங்குகள் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடன் முடிந்தன. முன்னதாக வர்த்தகம் துவங்கிய சிறிது நேரம் மட்டும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 439.95 புள்ளிகள் சரிந்து 31,159.81-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 135.75 புள்ளிகள் சரிந்து 9,735.78-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|