அன்மோல் அம்பானி கன்னி பேச்சுஅன்மோல் அம்பானி கன்னி பேச்சு ... இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு ; 65.82 இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு ; 65.82 ...
‘4வது தொழில் புரட்சி உருவாகி உள்ளது இந்தியா வாய்ப்பை தவறவிட கூடாது’ - இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2017
05:42

புதுடில்லி, செப். 28–‘‘அடுத்த ஓராண்­டில், ‘2ஜி’ தொழில்­நுட்ப வச­தியை விஞ்­சும் வகை­யில், ‘4ஜி’ வளர்ச்சி இருக்­கும்,’’ என, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் தலை­வர், முகேஷ் அம்­பானி தெரி­வித்து உள்­ளார்.அவர், டில்­லி­யில், ‘இந்திய மொபைல் காங்­கி­ரஸ்’ மாநாட்­டில், மேலும் பேசி­ய­தா­வது:‘டிஜிட்­டல்’ பொரு­ளா­தா­ரத்­தின் சுவா­சக் காற்­றாக, ‘டேட்டா’ எனப்­படும், தக­வல் பயன்­பாடு உள்­ளது. வாழ்க்­கை­யின் முக்­கிய அங்­க­மான இந்த வச­தியை, தடை­யின்றி மக்­கள் பெற வேண்­டும். குறைந்த கட்­ட­ணத்­தில், அதி­வே­க­மாக தக­வல்­களை பரி­மா­றிக் கொள்­ளும் வச­தியை வழங்க வேண்­டும்.‘2ஜி’ அவுட்ஒவ்­வொரு இந்­தி­ய­ருக்­கும், நியா­ய­மான விலை­யில், ‘ஸ்மார்ட் போன்’ கிடைக்க வேண்­டும். இதன் மூலம், எல்­லை­யில்லா அறி­வாற்­ற­லும், இணை­யத்­தின் சக்­தி­யும், மக்­க­ளுக்கு கிடைக்­கும்.இந்­திய மொபைல் போன் சந்­தை­யில், தக­வல் பரி­வர்த்­த­னை­களின் பிர­வா­கம் பொங்கி வழி­கிறது. அதை, 130 கோடி மக்­க­ளுக்கு கொண்டு செல்ல, வலு­வான, ‘டிஜிட்­டல்’ கட்­ட­மைப்பு தேவைப்­ப­டு­கிறது.அடுத்த ஓராண்­டில், ‘2ஜி’ தொழில்­நுட்ப சேவை­யின் பரப்பை விட, ‘4ஜி’ சேவை­யின் பரப்பு உய­ரும்.மொபைல் போனில், இணைய பயன்­பாட்­டில், கடந்த ஆண்டு, இந்­தியா, 155வது இடத்­தில் இருந்­தது. ஒரே ஆண்­டில், உல­க­ள­வில், மொபைல் போனில் தக­வல் பரி­வர்த்­த­னையை, அதி­க­ள­வில் மேற்­கொள்­ளும் நாடு என்ற நிலைக்கு உயர்ந்­துள்­ளது.இதற்கு, கடந்த ஆண்டு, ‘ஆர்­ஜியோ’ அறி­மு­கப்­ப­டுத்­திய, இல­வச மொபைல் போன் சேவை­யும், பின், மிகக் குறைந்த கட்­ட­ணத்­தில், அச்­சே­வையை நீட்­டித்­த­தும் தான் கார­ணம்.மொபைல் போன் தக­வல் பரி­வர்த்­த­னைக்கு, மேம்­பட்ட, ‘டிஜிட்­டல்’ கட்­ட­மைப்பு வச­தியை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம்.சர்­வ­தேச அள­வில், இயந்­தி­ர­ம­யம், பரந்த உற்­பத்தி, தானி­யங்கி நடை­முறை என்ற மூன்று தொழில் புரட்­சி­கள் நடந்­துள்ளன. ஆனால், இந்த வாய்ப்பை, இந்­தியா தவற விட்­டு­விட்­டது.அஸ்திவாரம்அடுத்து, தக­வல் பரி­வர்த்­தனை, இணைப்பு மற்­றும் செயற்கை நுண்­ண­றிவு செயல்­பா­டு­கள் மூலம், நான்­கா­வது தொழில் புரட்சி உரு­வாகி உள்­ளது. இந்த வாய்ப்பை, இந்­தியா தவ­ற­வி­டக் கூடாது.மொபைல் இணை­யம், மேகக் கணினி தொழில்­நுட்­பம் ஆகி­யவை தான், நான்­கா­வது தொழில் புரட்­சிக்­கான அஸ்­தி­வா­ரம்.தக­வல் பரி­வர்த்­தனை என்­பது, புதிய எரி­பொ­ருள். அதை, இந்­தியா இறக்­கு­மதி செய்ய தேவை­யில்லை. அது, நம்­மி­டம் அப­ரி­மி­த­மாக உள்­ளது. அது, ஏரா­ள­மான வாய்ப்­பு­களை உரு­வாக்­கும். இந்­தியா மற்­றும் கோடிக்­க­ணக்­கான இந்­திய மக்­களின் வாழ்க்­கையை வள­மாக்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
ஆதரவு தேவை‘டிஜிட்­டல்’ தொழில்­நுட்­பத்­தில், இந்­தியா வேக­மாக முன்­னேறி வரு­கிறது. இத்­து­றை­யில், இந்­தி­யா­விற்­கான நேரம் வந்து விட்­டது. சர்­வ­தேச அள­வில், மிகப்­பெ­ரிய தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் ஒவ்­வொன்­றும், இந்­தி­யாவை உற்று நோக்­கு­கின்றன. ‘டிஜிட்­டல்’ சேவை­யின் வளர்ச்­சிக்­கும், இந்­தி­யா­வின் தொலை­நோக்கு இலக்கை எட்­ட­ும், மத்­திய அரசு ஆத­ர­வ­ளிக்க வேண்­டும்.சுனில் மிட்டல், தலைவர், பார்தி ஏர்டெல்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)