பதிவு செய்த நாள்
29 செப்2017
05:01
புதுடில்லி, செப். 29–‘‘இந்திய மொபைல் போன் சந்தையில், அடுத்த மூன்று ஆண்டுகளில், 5௦ லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்,’’ என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.அவர், டில்லியில் நடைபெற்ற, தொலை தொடர்பு துறையினர் மாநாட்டில் பேசியதாவது:நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தொலை தொடர்பு துறையின் பங்கு, 6.5 சதவீதமாக உள்ளது. இத்துறையில், 14,122 கோடி டாலர் அளவிற்கு முதலீடு குவிந்துள்ளது.கடந்த, 2016ல், மொபைல் போன் துறை வருவாய், 22 சதவீத வளர்ச்சியுடன், 2,112 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இந்தாண்டு, 27 கோடி மொபைல் போன்கள் விற்பனையாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதில், 20 கோடி மொபைல் போன்கள்,உள்நாட்டு தயாரிப்பாக இருக்கும்.மொபைல் போன் துறை மூலம், 2020ல், 21,737 கோடி டாலர், அதாவது, 14 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான, பொருளாதார மதிப்பு உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலத்தில், இத்துறையில், 30 லட்சம் வேலைவாய்ப்புகள், நேரடியாகவும், 20 லட்சம் வேலைவாய்ப்புகள், மறைமுகமாகவும் உருவாகும்.உலகிலேயே, இந்தியாவில் தான், மிகக் குறைந்த கட்டணத்தில், தொலை தொடர்பு சேவை வழங்கப்படுகிறது. இது, மத்திய அரசின், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு வலுசேர்ப்பதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சூத்திரம்இந்தியாவிடம், தற்போது, வளமான எதிர்காலத்திற்கான சூத்திரம் உள்ளது. நம்மிடம் முதல் தரமான தொழில்நுட்ப தலைவர்களும், தலைசிறந்த நிபுணர்களும் உள்ளனர். அடுத்து, அனைத்து பொருட்களுடனான தொடர்பை ஏற்படுத்துவது தான், சவாலாக இருக்கும். இது, அளப்பரிய மதிப்பை வெளிக் கொண்டு வரும்.அருணா சுந்தரராஜன், செயலர், மத்திய தொலை தொடர்பு துறை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|