பதிவு செய்த நாள்
29 செப்2017
05:02
புதுடில்லி : மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லியை, நேற்று, தொழில் துறை மற்றும் ஏற்றுமதி அமைப்புகளைச் சேர்ந்தோர் சந்தித்து பேசினர்.ஜி.எஸ்.டி., விதிப்பால், ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், செலுத்திய வரியை, திரும்பப் பெறுவதில் ஏற்படும் கால தாமதம் உள்ளிட்ட சிக்கல்கள் குறித்தும், சமீபத்தில், பல்வேறு தரப்பினர், தங்கள் குறைகளை தெரிவித்தனர். இதையடுத்து, தொழில் துறை அமைப்புகளைச் சேர்ந்தோரை, நேற்று, நிதி அமைச்சர், அருண் ஜெட்லி அழைத்து சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர், கணேஷ் குப்தா கூறியதாவது:ஜி.எஸ்.டி., ‘ரிட்டர்ன்’ விஷயத்தில், குறு, சிறு தொழில் துறையினர் சந்தித்து வருகிற சிரமங்கள் குறித்து, நிதியமைச்சரிடம் எடுத்துச் சொன்னோம். சிறு ஏற்றுமதியாளர்கள், ஜி.எஸ்.டி., விதிப்பால், மிகவும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். செலுத்திய வரியை, திரும்பப்பெறுவது தாமதமாவதால், அவர்களுடைய பணப்புழக்கம் சிக்கலாகி வருகிறது. ‘இ – வாலட்’ போன்ற வசதிகளை, ஏற்றுமதியாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது குறித்து, கவனிக்க வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்கி சொன்னோம்.அமைச்சர், எங்கள் குறைகளை, மிகவும் கரிசனத்துடன்கேட்டுக் கொண்டார். இவ்விஷயத்தில், எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் உறுதியளித்து உள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|