முதலாண்டில், ‘டிபாசிட்’ திரும்ப கிடைக்கும்; அதிரடி திட்டத்தை அறிவித்தது, ‘ஆர்ஜியோ’முதலாண்டில், ‘டிபாசிட்’ திரும்ப கிடைக்கும்; அதிரடி திட்டத்தை அறிவித்தது, ... ... 3 சக்­கர, ‘பேட்­டரி’ வாக­னம் 3 சக்­கர, ‘பேட்­டரி’ வாக­னம் ...
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் 80 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும்: ‘கிரெடாய் – சி.பி.ஆர்.இ.,’ கூட்டறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2017
23:42

புதுடில்லி : ‘இந்­திய ரியல் எஸ்­டேட் துறை­யில், அடுத்த எட்டு ஆண்­டு­களில், கூடு­த­லாக, 80 லட்­சம் பேர் வேலை­வாய்ப்பு பெறு­வர்’ என, ‘கிரெ­டாய் – சி.பி.ஆர்.இ.,’ கூட்­ட­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அதன் விப­ரம்: புதிய ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­டம், ஜி.எஸ்.டி., போன்ற சீர்­தி­ருத்­தங்­க­ளால், நீண்ட கால அடிப்­ப­டை­யில், ரியல் எஸ்­டேட் துறை­யின் வளர்ச்சி சிறப்­பாக இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ரியல் எஸ்­டேட் துறை­யில், 2016 நில­வ­ரப்­படி, 92 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உள்ளன; 2025ல், கூடு­த­லாக, 80 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாகி, மொத்­தம், 1.72 கோடி­யாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

இதே காலத்­தில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், ரியல் எஸ்­டேட் துறை­யின் பங்­க­ளிப்பு, இரு மடங்கு உயர்ந்து, 13 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும். நகர்ப்­பு­றங்­களில், புதிய வீடு­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து வரு­கிறது. மேலும், இரண்டு மற்­றும் மூன்­றாம் நிலை நக­ரங்­களும், வேக­மாக விரி­வ­டைந்து வரு­கின்றன. இவை, ரியல் எஸ்­டேட் துறை­யின் வளர்ச்­சிக்­கான, அடிப்­படை கார­ணி­க­ளாக உள்ளன.

கடந்த, 2013ல், ரியல் எஸ்­டேட் துறை­யில், 360 கோடி சது­ரடி பரப்பு பயன்­பாட்­டிற்கு வந்­தது; இது, 2015ல், 820 கோடி சது­ரடி பரப்­பாக அதி­க­ரித்­துள்­ளது. இந்த புள்ளி விப­ரத்­தின்­படி, நீண்ட கால அடிப்­ப­டை­யில், ரியல் எஸ்­டேட் துறை­யின் வளர்ச்சி பிர­கா­ச­மாக உள்­ளது என­லாம். அதே சம­யம், வளர்ச்­சிக்­கான வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தும், ரியல் எஸ்­டேட் துறை பிரச்­னை­களை தீர்க்க, உரிய கொள்­கை­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தும் அவ­சி­யம். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

நம்பிக்கை:
இந்­திய ரியல் எஸ்­டேட் துறை, அமைப்பு சாரா­மல், பல பிரி­வு­க­ளாக சித­றிக் கிடந்­தது. தற்­போது, முன்­னே­றிய நாடு­களில் உள்­ளது போல, திட­மான கட்­ட­மைப்­பு­டன், அமைப்பு சார்ந்த துறை­யாக மாறி வரு­கிறது. ஆசிய பசி­பிக் நாடு­க­ளைச் சேர்ந்த, ரியல் எஸ்­டேட் நிறு­வ­னங்­களில், 82 சத­வீத இந்­திய நிறு­வ­னங்­கள், அடுத்த மூன்று ஆண்­டு­களில், பணி­யா­ளர் எண்­ணிக்­கையை உயர்த்த திட்­ட­மிட்டு உள்ளன. இது, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யின் மீதுள்ள நம்­பிக்கை, ஒழுங்­கு­முறை சீர்­தி­ருத்­தங்­களை அமல்­ப­டுத்­து­வ­தில் கண்டு வரும் நிலை­யான முன்­னேற்­றம் ஆகி­ய­வற்றை பிர­தி­ப­லிக்­கிறது.
-அன்ஷூமன் மேகசின் தலைவர், சி.பி.ஆர்.இ., இந்தியா – தென்கிழக்கு ஆசியா

துணை தொழில்கள்:
சாத­க­மான வர்த்­த­கச் சூழல், ஒழுங்­கு­முறை கட்­ட­மைப்பு போன்­ற­வற்­றால், 2025ல், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், ரியல் எஸ்­டேட் துறை­யின் பங்கு, இரு மடங்­கும் அதி­க­ரிக்­கும். ரியல் எஸ்­டேட் துறை வளர்ச்­சி­யால், வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கும் என்­ப­து­டன், இத்­துறை சார்ந்த, 250 துணை தொழில்­க­ளி­லும், குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.
-ஜக்சய் ஷா, தலைவர், ‘கிரெடாய்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)