பதிவு செய்த நாள்
01 அக்2017
05:53
மகிந்திரா நிறுவனம், ‘இ – ஆல்பா மினி’ எனும், ‘பேட்டரி’யால் இயங்கும், மூன்று சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், தனிநபர் வாகனம் மற்றும் சரக்கு வாகன பிரிவில், அதிகளவில், பேட்டரி வாகனங்களை, அறிமுகப்படுத்திய நிறுவனம் என்ற பெருமையை, மகிந்திரா பெறுகிறது.இந்த புதிய வாகனத்தில், டிரைவர் மற்றும் நான்கு பயணியர் உட்கார இட வசதி உள்ளது. இந்திய சாலைகள் நிலை மற்றும் பயணியரின் விருப்பத்தை மனதில் வைத்து, இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. டில்லியில் தற்போது, சந்தைக்கு வந்துள்ள, ‘இ – ஆல்பா மினி’ விரைவில், நாட்டின் மற்ற நகரங்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது.இதில், ‘120 ஏ.எச்., பேட்டரி’ பொருத்தப்பட்டு உள்ளது. புதிய வெளிப்புற டிசைன், கடினமான வெளிப்புற கட்டமைப்பு, தாராளமான இட வசதி, நவீன, ‘சஸ்பென்ஷன்’ மற்றும், ‘சேசிஸ்’ என, கவர்ச்சி அம்சங்கள் தாராளம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|