பதிவு செய்த நாள்
01 அக்2017
05:56
புதுடில்லி : ஜி.எஸ்.டி., திட்டத்தில், வரியை முதலில் செலுத்தி, பின் திரும்பப் பெறும் நடைமுறையால், 65 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கும் அபாயம் உள்ளதாக, நேற்று முன்தினம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.தற்போது, வரி செலுத்துவதற்கு பதிலாக, கடன் பத்திரங்கள் அல்லது வங்கி உத்தரவாத கடிதத்தை அளிக்கும் நிறுவனங்கள், சரக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், கடன் பத்திரங்கள் அல்லது வங்கி உத்தரவாத கடிதம் பெறுவது, சிறிய ஏற்றுமதியாளர்களுக்கு கடினமாக உள்ளது.அத்தகைய, சிறிய நிறுவனங்களின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதிக்கு, வங்கி உத்தரவாத கடிதம் அளிப்பதில் இருந்து விலக்களிக்க, மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|