பதிவு செய்த நாள்
02 அக்2017
01:11
பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் இருந்து வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறும் போது, பி.எப்., தொகையை, புதிய நிறுவன கணக்கிற்கு மாற்றிக் கொள்ள எளிதான வழிமுறை அறிமுகம் ஆகியிருக்கிறது.இதற்காக, தனியே விண்ணப்பிக்கும் தேவையில்லாமல், குறிப்பிட்ட தகவல்களை தெரிவித்தால், தொகை தானாக மாற்றப்பட்டுவிடும்.
புதிய நிறுவனத்தில் இணைந்ததும் ஊழியர், ஒருங்கிணைந்த, உறுதி ஆவண படிவம் 11ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் அடிப்படை தகவல்களோடு, நிரந்தர கணக்கு எண் மற்றும், பி.எப்., கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும்.இந்த தகவல்களை புதிய நிறுவனம் சமர்ப்பிக்கும் போது, நிரந்தர கணக்கு எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், பி.எப்., தொகை தானாக மாறுவதற்கான செயல்முறை இயக்கப்படும். இது தொடர்பான தகவல் குறுஞ்செய்தி வழியே தெரிவிக்கப்படும்.
இந்த மாற்றத்தை நிறுத்துமாறு கோராத பட்சத்தில், புதிய நிறுவனத்தால் முதல் தவணை செலுத்தப்பட்ட பின் பழைய தொகை புதிய கணக்கிற்கு மாற்றப்படும். இது தொடர்பான தகவலும் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|