பதிவு செய்த நாள்
02 அக்2017
01:14
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளிதழ்கள், இணையதளங்கள், ஷாப்பிங் மால்கள் என, எல்லாவற்றிலும் தள்ளு படிகளும், சிறப்பு சலுகை அறிவிப்புகளும் நுகர்வோரை கவர்ந்திழுக்கும் நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இந்த சலுகைகளை எப்படி அணுக வேண்டும்? எனும் கேள்வி எழும் அதே நேரத்தில்; சந்தையில் தேவை அதிகரித்திருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் சரியான விலையில் பொருத்தமான வீடுகளை வாங்க தயாராக இருப்பதாகவும் வல்லுனர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், பண்டிகை கால சலுகைகளை பயன்படுத்தி, வீடு வாங்க தீர்மானிப்பது சரியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
வீடு வாங்க விரும்புகிறவர்கள், கட்டி முடிக்கப்பட்டு குடியேற தயாராக உள்ள குடியிருப்பு திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். சில ஆண்டுகள் முன்வரை, பண்டிகை காலத்தில் புதிதாக துவங்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட்டன. ரியல் எஸ்டேட் சட்டம் அமலுக்கு வந்த பின், இதில் பதிவு செய்யப்பட்ட திட்டங்கள் மட்டுமே, விற்க அல்லது விளம்பரம் செய்யப்படலாம். எனினும், ஏற்கனவே, ‘ஆக்குபேஷன்’ சான்றிதழ் பெற்ற அல்லது அதற்காக விண்ணப்பித்துள்ள குடியிருப்பு வீடுகளை விற்பனை செய்யலாம். இந்த வீடுகளை விற்பனை செய்வதில் தான், நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
வீடு வாங்க விரும்புகிறவர்கள், உடனடியாக குடியேறக்கூடிய வீட்டை வாங்க தீர்மானிக்கலாம். இவற்றுக்கான விலை சற்று அதிகமாக இருந்தாலும் மற்ற சிக்கல்கள் இல்லை. இது தவிர, கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி சேமிப்பு உண்டு என்றும், நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. கட்டப்படும் வீடுகளுக்கே இந்த வரி பொருந்தும். எனவே இந்த சலுகையும் சாதகமாக அமையலாம். ஆனால் பொடி எழுத்து நிபந்தனைகளை கவனமாக படிக்க வேண்டும். இவை தவிர, பல நிறுவனங்கள் ஆன் – லைன் விற்பனை கண்காட்சியும் நடத்துகின்றன.
சொகுசு வீடுகளுக்கு மாடுலர் கிச்சன் உள்ளிட்ட சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. எனினும், இத்தகைய சலுகைகளை விட ரொக்க தள்ளுபடியை நாடுவது பொருத்தமாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|