பதிவு செய்த நாள்
03 அக்2017
00:29
புதுடில்லி : அன்னிய நிதி நிறுவனங்கள், செப்டம்பரில், 11,392 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து உள்ளன.
டாலர் மதிப்பு உயர்வு; ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயில் ஏற்பட்டுள்ள சரிவு; சர்வதேச அரசியல் நிலவரம் போன்றவற்றால், அன்னிய நிதிநிறுவனங்கள், அதிகளவில், பங்குகளை விற்பனை செய்கின்றன.
இந்நிறுவனங்கள், இந்தாண்டு, பிப்., – ஜூலை வரை, பங்குகளில், 62 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தன. அதிலிருந்து, செப்டம்பரில் மட்டும், 11,392 கோடி ரூபாய் மதிப்புள்ள, பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதே சமயம், இதே மாதத்தில், கடன் பத்திரச் சந்தைகளில், 4,430 கோடி ரூபாய் முதலீடுசெய்துள்ளன.
ஆகஸ்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், 12,770 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, நிகர அளவில் விற்பனை செய்துள்ளன. இந்தாண்டு, இதுவரை, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்குச் சந்தை முதலீடு, 34,350 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|