சவரன் ரூ.22,500 க்கு கீழ் சரிந்தது தங்கம் விலைசவரன் ரூ.22,500 க்கு கீழ் சரிந்தது தங்கம் விலை ... தினமும் 3 ஜிபி டேட்டா : இது ஏர்டெல் சலுகை தினமும் 3 ஜிபி டேட்டா : இது ஏர்டெல் சலுகை ...
ஸ்டிரைக்கில் குதிக்க போவதாக அரசுக்கு வங்கி ஊழியர்கள் மிரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2017
14:41

புதுடில்லி : கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி உயர் மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மக்கள், தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை அருகில் உள்ள வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை அதிகமானது. பலரும் நாள் ஒன்றிற்கு 14 மணி நேரம் வரை பணிசெய்யும் நிலை ஏற்பட்டது. வேலை நெருக்கடி கருதி பலரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பின் போது கூடுதலாக பணியாற்றிய வங்கி ஊழியர்களுக்கு, கூடுதல் பணிக்கான சம்பளம் இதவரை வழங்கப்படவில்லை. ஏறக்குறைய 11 மாதங்கள் கடந்த பிறகும், அரசிடம் பலமுறை வலியுறுத்திலும் பணியாற்றிய கூடுதல் நேரத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை.

ஊழியர்கள் ஒருவருக்கு அவர் கூடுதலாக பணியாற்றும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 முதல் ரூ.300 வரை வழங்கப்பட வேண்டும். நிலுவை தொகை வழங்கப்படாதது தொடர்பாக மத்திய அரசுக்கு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக நிலுவை தொகையை தர நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் அல்லது சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வோம் எனவும் வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)