பதிவு செய்த நாள்
05 அக்2017
23:52
புதுடில்லி : மத்திய நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர், பி.பி.சவுத்ரி கூறியதாவது: மத்திய அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்க, தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, 2,17,239 நிறுவனங்கள், போலியாக உருவாக்கப்பட்டு உள்ளது தெரிந்தது.
எவ்விதமான வர்த்தகத்திலும் ஈடுபடாத, இந்நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. செப்., 22 நிலவரப்படி, இந்த போலி நிறுவனங்களைச் சேர்ந்த, 3,19,637 இயக்குனர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், தகுதியிழப்பு செய்யப்படுவர். இந்த எண்ணிக்கை, இறுதி நிலவரப்படி, 4.50 லட்சமாக உயரும் என, தெரிகிறது.
நிறுவனங்கள் சட்டப்படி, பதிவு செய்த அனைத்து நிறுவனங்களும், ஆண்டுதோறும், முறையாக கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகள், கணக்குகளை தாக்கல் செய்யாத நிறுவனங்கள், நிறுவனங்கள் பதிவு அலுவலக பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். இது போன்ற நிறுவனங்களால், நன்கு செயல்படும் நிறுவனங்களுக்கும், கெட்ட பெயர் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|