போலி நிறுவன இயக்குனர்கள் 4.50 லட்சம் பேர் தகுதி நீக்கம்போலி நிறுவன இயக்குனர்கள் 4.50 லட்சம் பேர் தகுதி நீக்கம் ... மூத்த குடிமக்களுக்கு உதவுங்க: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு மூத்த குடிமக்களுக்கு உதவுங்க: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு ...
வங்கிகளின் வட்டி நிர்ணயத்திற்கு கடிவாளம்; ரிசர்வ் வங்கி திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2017
23:53

மும்பை : வங்­கி­கள், தன்­னிச்­சை­யாக வட்­டியை நிர்­ண­யிப்­ப­தற்கு முற்­றுப்­புள்ளி வைக்க, ரிசர்வ் வங்கி திட்­ட­மிட்டு உள்­ளது.

வங்­கி­கள், தற்­போது, எம்.சி.எல்.ஆர்., எனப்­படும், அடிப்­படை வட்டி விகி­தத்தை மைய­மாக வைத்து, வாடிக்­கை­யா­ள­ரின் தன்­மைக்கு ஏற்ப, கடன்­க­ளுக்கு, வெவ்­வேறு வட்டி விகி­தத்தை நிர்­ண­யிக்­கின்றன. ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்­கும், குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை குறைத்­தால், வங்­கி­கள் அதன் பயனை, வாடிக்­கை­யா­ள­ருக்கு வழங்க வேண்­டும். ஆனால், பெரும்­பா­லான வங்­கி­கள், ‘ரெப்போ’ வட்டி உய­ரும் போது, கட­னுக்­கான வட்­டியை உயர்த்­து­வ­தில் காட்­டும் வேகத்தை, ‘ரெப்போ’ வட்­டியை குறைக்­கும் போது காட்­டு­வ­தில்லை.

கடந்த, 2014 டிச., – 2016 அக்., வரை, ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்­டியை, 1.75 சத­வீ­தம் குறைத்­துள்­ளது. ஆனால், வங்­கி­கள், கடன்­க­ளுக்­கான வட்­டியை, 0.61 சத­வீ­தம் மட்­டுமே குறைத்­துள்ளன. இதற்கு தீர்வு காண அமைக்­கப்­பட்ட, ஜனக் ராஜ் தலை­மை­யி­லான குழு, அதன் பரிந்­து­ரையை, ரிசர்வ் வங்­கி­யி­டம் வழங்கி உள்­ளது.

அதில் கூறப்­பட்டு உள்­ள­தா­வது:வங்­கி­கள், எம்.சி.எல்.ஆர்., அடிப்­ப­டை­யில், வெவ்­வேறு வட்டி விகி­தங்­களை நிர்­ண­யிப்­ப­தற்கு பதி­லாக, நிதிச் சந்தை நில­வ­ரப்­படி, கட­னுக்­கான வட்­டியை நிர்­ண­யிக்க வேண்­டும். அதா­வது, ‘டி – பில், சர்­டி­பி­கேட் ஆப் டிபா­சிட், ரிசர்வ் வங்­கி­யின், ரெப்போ வட்டி’ ஆகிய, ஏதா­வது ஒன்­றின் அடிப்­ப­டை­யில், வங்­கி­கள், கட­னுக்­கான வட்­டியை நிர்­ண­யிக்க வேண்­டும். மேலும், வங்­கி­கள், வட்டி விகி­தத்தை மாற்­றும் போது, கடன்­தா­ரர்­க­ளி­டம் கட்­ட­ணம் வசூ­லிக்­க­வும், தடை விதிக்க வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது. இத்­திட்­டம் அம­லா­னால், வீட்­டு­வ­சதி, தனி­ந­பர் கடன்­க­ளுக்­கான வட்டி, நிதிச் சந்­தைக்­கேற்ப இருக்­கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)