பதிவு செய்த நாள்
05 அக்2017
23:53
மும்பை : வங்கிகள், தன்னிச்சையாக வட்டியை நிர்ணயிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது.
வங்கிகள், தற்போது, எம்.சி.எல்.ஆர்., எனப்படும், அடிப்படை வட்டி விகிதத்தை மையமாக வைத்து, வாடிக்கையாளரின் தன்மைக்கு ஏற்ப, கடன்களுக்கு, வெவ்வேறு வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை குறைத்தால், வங்கிகள் அதன் பயனை, வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான வங்கிகள், ‘ரெப்போ’ வட்டி உயரும் போது, கடனுக்கான வட்டியை உயர்த்துவதில் காட்டும் வேகத்தை, ‘ரெப்போ’ வட்டியை குறைக்கும் போது காட்டுவதில்லை.
கடந்த, 2014 டிச., – 2016 அக்., வரை, ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை, 1.75 சதவீதம் குறைத்துள்ளது. ஆனால், வங்கிகள், கடன்களுக்கான வட்டியை, 0.61 சதவீதம் மட்டுமே குறைத்துள்ளன. இதற்கு தீர்வு காண அமைக்கப்பட்ட, ஜனக் ராஜ் தலைமையிலான குழு, அதன் பரிந்துரையை, ரிசர்வ் வங்கியிடம் வழங்கி உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:வங்கிகள், எம்.சி.எல்.ஆர்., அடிப்படையில், வெவ்வேறு வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதற்கு பதிலாக, நிதிச் சந்தை நிலவரப்படி, கடனுக்கான வட்டியை நிர்ணயிக்க வேண்டும். அதாவது, ‘டி – பில், சர்டிபிகேட் ஆப் டிபாசிட், ரிசர்வ் வங்கியின், ரெப்போ வட்டி’ ஆகிய, ஏதாவது ஒன்றின் அடிப்படையில், வங்கிகள், கடனுக்கான வட்டியை நிர்ணயிக்க வேண்டும். மேலும், வங்கிகள், வட்டி விகிதத்தை மாற்றும் போது, கடன்தாரர்களிடம் கட்டணம் வசூலிக்கவும், தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இத்திட்டம் அமலானால், வீட்டுவசதி, தனிநபர் கடன்களுக்கான வட்டி, நிதிச் சந்தைக்கேற்ப இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|