மூத்த குடிமக்களுக்கு உதவுங்க: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவுமூத்த குடிமக்களுக்கு உதவுங்க: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு ... இன்று 60 பொருட்களின் விலைகள் குறைகிறது? இன்று 60 பொருட்களின் விலைகள் குறைகிறது? ...
3 மாதங்களில் முதன்முறையாக வளர்ச்சி பாதையில் சேவைகள் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2017
23:54

புதுடில்லி : புதிய, ‘ஆர்­டர்’கள் அதி­க­ரித்­த­தால், நாட்­டின் சேவை­கள் துறை, மூன்று மாதங்­களில் இல்­லாத வகை­யில், செப்­டம்­பரில் முதன் ­மு­றை­யாக, வளர்ச்சி கண்­டி­ருப்­பது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

‘நிக்கி இந்­தியா’ நிறு­வ­னம், செப்­டம்­ப­ரில், இந்­திய சேவை­கள் துறை குறித்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: ஜி.எஸ்.டி., அறி­மு­கம் கார­ண­மாக, நாட்­டின் சேவை­கள் துறை­யின் வளர்ச்சி, சுணக்­கம் கண்­டி­ருந்­தது. இந்­நி­லை­யில், செப்­டம்­ப­ரில், சேவை­கள் துறை­யில், அதி­க­ள­வில், புதிய ஆர்­டர்­கள் குவிந்­தன. இத­னால், வேலை­வாய்ப்­பு­களும் அதி­க­ரித்­துள்ளன.

பொரு­ளா­தார சூழல்:
இந்த புள்ளி விப­ரங்­களின் அடிப்­ப­டை­யில், செப்­டம்­ப­ரில், சேவை­கள் துறைக்­கான, ‘நிக்கி இந்­தியா சேவை­கள், பி.எம்.ஐ.பி.ஏ., குறி­யீடு’ 50.7 புள்­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளது; இது, ஆகஸ்­டில், 47.5 புள்­ளி­க­ளாக, பின்­ன­டைவை கண்­டி­ருந்­தது.செப்­டம்­ப­ரில், சேவை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து உள்­ள­து­டன், சேவை நிறு­வ­னங்­களின் விளம்­பர பிர­சா­ரங்­களும், வளர்ச்­சிக்கு துணை புரிந்­துள்ளன.

ஜூலை­யில், ஜி.எஸ்.டி., அறி­மு­க­மா­ன­தும், சேவை­கள் துறை வளர்ச்­சி­யில், சுணக்­கம் ஏற்­பட்­டது. இத்­த­கைய இடர்ப்­பா­டு­களை கடந்து, சேவை­கள் துறை வளர்ச்­சியை நோக்கி நகர்ந்­தி­ருப்­பது, தெரிய வந்­துள்­ளது.இதே போல, தயா­ரிப்­புத் துறை­யும், மந்த நிலை­யில் இருந்து விடு­பட்டு, வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்­ளது.

நாட்­டின் பொரு­ளா­தார சூழல் மேம்­பட்டு வரு­வ­தால், வேலை­வாய்ப்பு அதி­க­ரித்­து உள்­ளது. தேவை அதி­க­ரிப்பு கார­ண­மாக, சேவை­கள் துறை­யில், வேலை­வாய்ப்பு வளர்ச்சி விகி­தம், ஆறரை ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, செப்­டம்­ப­ரில் உயர்ந்­துள்­ளது. இதற்கு முன், 2011 மத்­தி­யில், போக்­கு­வ­ரத்து, கிடங்கு மற்­றும் நுகர்­வோர் சேவை­களின் துணை பிரி­வு­களில், வேலை­வாய்ப்பு வளர்ச்சி விகி­தம் அதி­க­மாக காணப்­பட்­டது.

நம்பிக்கை:
அடுத்த ஓராண்டு வரை, சேவை­கள் துறை­யின் வளர்ச்சி நன்கு இருக்­கும் என, இத்­து­றை­யி­னர் நம்­பிக்கை தெரி­வித்து உள்­ள­னர். எனி­னும், ஜூலை – செப்., வரை­யி­லான, காலாண்டு வளர்ச்சி குறித்த நம்­பிக்கை, குறை­வா­கவே உள்­ளது.

செப்­டம்­ப­ரில், தயா­ரிப்­புத் துறை­யின் வளர்ச்­சியை குறிக்­கும், ‘நிக்கி இந்­தியா, எம்.பி.எம்.ஐ.,’ குறி­யீடு, 51.2 புள்­ளி­க­ளாக உள்­ளது. முந்­தைய, ஆக., மாதத்­தி­லும், இதே அள­வி­லான வளர்ச்சி காணப்­பட்­டது. ஆக, ஜி.எஸ்.டி.,க்கு பின், தயா­ரிப்பு மற்­றும் சேவை­கள் துறை­கள் எழுச்சி கண்­டி­ருப்­பது, நாட்­டின் பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி காண துவங்கி உள்­ள­தற்­கான அறி­குறி என, கொள்­ள­லாம். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

ஆரோக்கியமான அறிகுறி:
ஜூலை­யில், ஜி.எஸ்.டி., அறி­மு­க­மா­னது முதல், இந்­திய தனி­யார் துறை­யின் வளர்ச்சி சரிந்து காணப்­பட்­டது. இந்த நிலை, செப்­டம்­ப­ரில் மாறி உள்­ளது. தயா­ரிப்பு மற்­றும் சேவை­கள் துறை­கள், பின்­ன­டை­வில் இருந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்­ளது, ஆரோக்­கி­ய­மான அறி­கு­றி­யா­கும்.
-ஆஷ்னா தோதியாபொருளாதார வல்லுனர், ஐ.எஸ்.எஸ்., மார்கிட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)