பதிவு செய்த நாள்
07 அக்2017
00:07
மும்பை : ‘‘வங்கியின் வாராக்கடனை குறைத்து, லாபத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படும்,’’ என, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், புதிய தலைவராக பொறுப்பேற்கும், ரஜ்னிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.
எஸ்.பி.ஐ., தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா, ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைவராக, ரஜ்னிஷ் குமார், இன்று பொறுப்பேற்கிறார்.
அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடர்ப்பாட்டுக்குரிய சொத்துகளுக்கு தீர்வு காண்பதற்கு, முன்னுரிமை அளிக்கப்படும். அவசர கால அடிப்படையில், வாராக்கடன்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி, ஏற்கனவே, கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடனுக்கு, தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில், அதில் சில மாற்றங்களை காணலாம்.
இரு ஆண்டுகளாக, வாராக்கடனுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டதால், வங்கியின் லாப வரம்பு பாதிக்கப்பட்டது. நான், லாப வரம்பை உயர்த்த பாடுபடுவேன். இடர்ப்பாட்டு கடன்களை மேற்பார்வையிட, ஒரு குழுவும், கடன் வழங்குவதை அதிகரிக்க, தனி குழுவும் அமைப்பது குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும். வங்கி, போதிய மூலதனத்துடன் செயல்படுகிறது. அதன் அடிப்படையில், கடன் வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ளும். அதனால், 2019 மார்ச் வரை, வங்கிக்கு, கூடுதல் மூலதனம் தேவையில்லை.
நிதிச் சந்தையில் நிலவும் வட்டியின் அடிப்படையில், வங்கிகள் கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கும், ரிசர்வ் வங்கியின் திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், கடன் மட்டுமின்றி, டிபாசிட்டிற்கும், இதே அளவுகோல் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|