‘ஏர் – இந்தியா’ பங்கு விற்பனை: மத்திய அரசு தீவிரம்‘ஏர் – இந்தியா’ பங்கு விற்பனை: மத்திய அரசு தீவிரம் ... ஹைப்பர்சிட்டி நிறுவனத்தை பியூச்சர் குழுமம் வாங்குகிறது ஹைப்பர்சிட்டி நிறுவனத்தை பியூச்சர் குழுமம் வாங்குகிறது ...
‘வாராக்கடனை குறைத்து லாபமீட்ட முன்னுரிமை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2017
00:07

மும்பை : ‘‘வங்­கி­யின் வாராக்­க­டனை குறைத்து, லாபத்தை அதி­க­ரிக்க முன்­னு­ரிமை அளிக்­கப்­படும்,’’ என, எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வின், புதிய தலை­வ­ராக பொறுப்­பேற்­கும், ரஜ்­னிஷ் குமார் தெரி­வித்து உள்­ளார்.

எஸ்.பி.ஐ., தலை­வர், அருந்­ததி பட்­டாச்­சார்யா, ஓய்வு பெற்­றதை அடுத்து, புதிய தலை­வ­ராக, ரஜ்­னிஷ் குமார், இன்று பொறுப்­பேற்­கி­றார்.

அவர், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது: இடர்ப்­பாட்­டுக்­கு­ரிய சொத்­து­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு, முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். அவ­சர கால அடிப்­ப­டை­யில், வாராக்­க­டன்­க­ளுக்கு தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். வங்கி, ஏற்­க­னவே, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் வாராக்­க­ட­னுக்கு, தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறது. விரை­வில், அதில் சில மாற்­றங்­களை காண­லாம்.

இரு ஆண்­டு­க­ளாக, வாராக்­க­ட­னுக்கு அதி­க­ள­வில் நிதி ஒதுக்­கப்­பட்­ட­தால், வங்­கி­யின் லாப வரம்பு பாதிக்­கப்­பட்­டது. நான், லாப வரம்பை உயர்த்த பாடு­ப­டு­வேன். இடர்ப்­பாட்டு கடன்­களை மேற்­பார்­வை­யிட, ஒரு குழு­வும், கடன் வழங்­கு­வதை அதி­க­ரிக்க, தனி குழு­வும் அமைப்­பது குறித்து, விரை­வில் முடிவு செய்­யப்­படும். வங்கி, போதிய மூல­த­னத்­து­டன் செயல்­ப­டு­கிறது. அதன் அடிப்­ப­டை­யில், கடன் வளர்ச்­சியை மேம்­ப­டுத்­திக் கொள்­ளும். அத­னால், 2019 மார்ச் வரை, வங்­கிக்கு, கூடு­தல் மூல­த­னம் தேவை­யில்லை.

நிதிச் சந்­தை­யில் நில­வும் வட்­டி­யின் அடிப்­ப­டை­யில், வங்­கி­கள் கட­னுக்­கான வட்­டியை நிர்­ண­யிக்­கும், ரிசர்வ் வங்­கி­யின் திட்­டத்தை வர­வேற்­கி­றோம். ஆனால், கடன் மட்­டு­மின்றி, டிபா­சிட்­டிற்­கும், இதே அள­வு­கோல் கடைப்­பி­டிக்­கப்­பட வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)