ரூபாய் மதிப்பு உயர்வால் தோல் காலணி ஏற்றுமதி பாதிப்புரூபாய் மதிப்பு உயர்வால் தோல் காலணி ஏற்றுமதி பாதிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ...
‘இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி., உதவும்’: உலக வங்கி தலைவர் புகழாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2017
00:09

வாஷிங்டன் : ‘‘இந்­திய பொரு­ளா­தார மந்த நிலை தற்­கா­லி­க­மா­னதே தவிர, அந்­நாடு, ஜி.எஸ்.டி., அறி­மு­கம் கார­ண­மாக, சிறப்­பான வளர்ச்சி காணும்,’’ என, உலக வங்கி தலை­வர், ஜிம் யங் கிம் தெரி­வித்து உள்­ளார்.

அமெ­ரிக்க தலை­ந­கர், வாஷிங்­ட­னில், பன்­னாட்டு நிதி­யம் மற்­றும் உலக வங்­கி­யின் ஆண்டு பொதுக்­கூட்­டம் நடை­பெற உள்­ளது. இதில் பங்­கேற்க வந்த, ஜிம் யங் கிம், இந்­தியா குறித்து, செய்­தி­யா­ளர்­கள் கேட்ட கேள்­விக்கு பதில் அளித்­தார்.

அதன் விப­ரம்: பிர­த­மர் மோடி, இந்­தி­யா­வின் வர்த்­த­கச் சூழலை மேம்­ப­டுத்த, தீவிர முயற்சி மேற்­கொண்டு வரு­வதை, உலக வங்கி உன்­னிப்­பாக கவ­னித்து வரு­கிறது. மோடி எடுத்து வரும் நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும், நல்ல பயனை அளிக்­கும் என, எதிர்­பார்க்­கி­றோம். நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான, முதல் காலாண்­டில், இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, 5.7 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.

தொய்வு:
இது, நாடு வளர்ச்சி பாதை­யில் சென்று கொண்­டி­ருக்­கும் போது ஏற்­பட்ட, சிறிய பிறழ்வு போன்ற போக்கு தான். ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­தால், நாடு, தற்­கா­லிக இடர்ப்­பா­டு­களை சந்­தித்­துள்­ளது. இதன் விளை­வாக, பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் தொய்வு ஏற்­பட்­டு உள்­ளது. ஜி.எஸ்.டி., நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தில், மிகப்­பெ­ரிய அள­வில், சாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். அத­னால், வரும் மாதங்­களில், பொரு­ளா­தார சுணக்­கம் சரி­யாகி விடும்.

நடப்பு நிதி­யாண்­டில், பொரு­ளா­தார வளர்ச்சி ஸ்தி­ர­மாக இருக்­கும். தனிப்­பட்ட முறை­யில், என்னை பொறுத்­த­வரை, பிர­த­மர் மோடி, கிடைத்த வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்தி, இந்­திய மக்­கள் அனை­வ­ரை­யும் முன்­னேற்ற வேண்­டும் என்­ப­தில், உறு­தி­யாக உள்­ளார். ஆனால், இந்­தியா ஏரா­ள­மான சவால்­களை எதிர்­நோக்கி உள்­ளது. கல்வி, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­களில், சற்று முன்­னேற்­றம் காணப்­ப­டு­கிறது. எனி­னும், பெரும்­பான்மை நாடு­களை போல, இத்­து­றை­களில், இந்­தியா இன்­னும் அதிக முன்­னேற்­றம் காண வேண்­டும்.

பங்களிப்பு:
பிர­த­மர் மோடி, அர­சி­யல் கொள்கை மற்­றும் உறு­திப்­பாடு குறித்த தன் நிலையை, ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் தெளி­வாக வெளிப்­ப­டுத்தி உள்­ளார். அவர், அதை எப்­படி செயல்­ப­டுத்­து­கி­றார் என்­பதை, உலக வங்கி ஆரா­யும். அதன் அடிப்­ப­டை­யில், உலக வங்கி, எந்த அளவு முடி­யுமோ, அந்த அள­விற்கு, ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை, இந்­தி­யா­விற்கு விரைந்து வழங்­கும்; இந்­தி­யா­வின் மனி­த­வள ஆற்­றலை மேம்­ப­டுத்த துணை புரி­யும்.

சுகா­தார பிரச்­னை­க­ளுக்கு, மோடி அளித்து வரும் முக்­கி­யத்­து­வம் பாராட்­டத்­தக்­கது. அவ­ரது தலை­மை­யில், மிகச் சிறப்­பாக செயல்­ப­டுத்­தப்­பட்டு வரும் திட்­டங்­களில் ஒன்­றான, ‘துாய்மை இந்­தியா’ மிகச் சிறந்த திட்­ட­மா­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)