பதிவு செய்த நாள்
08 அக்2017
04:27
சுவீடனைச் சேர்ந்த, ‘வோல்வோ’ நிறுவனத்தின், பிரீமியம் – எஸ்.யு.வி., வரிசையில், ‘எக்ஸ்.சி., 40’ புதிதாக இடம் பிடித்துள்ளது. இது, இத்தாலியில், மிலன் நகரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பெல்ஜியத்தில் உள்ள, வோல்வோ நிறுவன ஆலையில், இதன் உற்பத்தி துவங்குகிறது. அதனால், இந்தியா உட்பட, உலகம் முழுவதும், இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது.இந்த வாகனத்தை அறிமுகம் செய்ததன் மூலம், சிறிய ரக, எஸ்.யு.வி., விற்பனையில், வோல்வோ, முதன்முறையாக களம் காண்கிறது. இந்த காருடன், பராமரிப்புக்காக, ‘கேர் பை வோல்வோ’ எனும், சலுகை திட்டமும் அறிமுகமாகிறது. கூடுதல் அம்சங்கள் அதிகமுள்ள, இதர நிறுவனங்களின், சிறிய, எஸ்.யு.வி., களுக்கு, இது சளைத்ததாக இருக்காது என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, ‘டி 4 டீசல்; டி5’ பெட்ரோல், இன்ஜினுடன் வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|