பதிவு செய்த நாள்
08 அக்2017
23:55
இந்திய பங்குச் சந்தைகள், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இரு மாதங்கள் சரிவில் வர்த்தகமாகின. அக்டோபர் முதல் வாரத்தில், இந்த சரிவில் இருந்து நிப்டி, 148 புள்ளிகள் மீண்டது. தேசிய பங்கு சந்தை குறியீடான, நிப்டி, 9,979 என்ற நிலையில், கடந்த வெள்ளியன்று முடிவடைந்தது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் தொடர்ந்து வரலாற்று உச்சத்தில் வியாபாரம் நடைபெறுகிறது. இதன் தாக்கம் நமது சந்தையிலும் பிரதிபலிக்கும்.இருப்பினும், இந்த வாரம், இரு முக்கிய பொருளாதார காரணிகள் மற்றும் நிறுவனங்களின் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு நிதி அறிக்கைகள் வெளிவர உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து இருக்கிறது. கடந்த வாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வளர்ச்சி, 7.32 சதவீதத்தில் இருந்து 6.71 சதவீதமாக குறைந்தது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி குறித்த நடவடிக்கை, சந்தையில் நுகர்வோர் வாங்கும் திறனை அதிகரிக்க செய்த முடிவாகும். ஆகஸ்ட் மாதத்தின் இந்திய தொழிற்துறை வளர்ச்சி, ஜூலை மாதத்தின், 1.2 சதவீதத்திலிருந்து, 2 முதல் 3 சதவீதம் ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தின் பணவீக்க விகிதம், முந்தைய மாதத்தை விட, 0.14 சதவீதம் குறைந்து, 3.20 சதவீதமாக இருக்கும் என கருதப்படுகிறது.மேலும், முன்னணி தனியார் வங்கிகளின் காலாண்டு நிதி அறிக்கைகள் வெளிவர உள்ளன. கூடவே, தொழிற்துறையை சேர்ந்த டி.சி.எஸ்., உள்ளிட்ட நிறுவனங்களின் நிதி அறிக்கைகளும் வர உள்ளன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் புதிய பங்கு வெளியீடுகள் மூலமாக, 16,680 கோடி ரூபாய்க்கான பங்குகள் வெளியிடப்பட்டன. இந்த மாதத்தில், 8 புதிய பங்குகள் வெளிவர உள்ளன. குறிப்பாக, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், 11,400 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வெளியிட உள்ளது. 2008ம் ஆண்டுக்கு பின், அதிகளவிலான வெளியீட்டு தொகை கொண்ட பங்கு வெளியீடு இதுவாகும்.
சர்வதேச சந்தையைப் பொறுத்தவரை, அமெரிக்க சந்தை, தொடர் உயர்வில் உள்ளது. அமெரிக்கா வட்டி விகிதத்தை குறைக்க தீர்மானித்துள்ளது. மேலும், ‘ஜி20’ நாடுகள் கூட்டம் இந்த வாரம் துவங்க உள்ளது. இது போன்ற பல நிகழ்வுகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.நிப்டியைப் பொறுத்தவரை, இந்த வாரத்தில், முதல் ரெசிஸ்டென்ஸ், 10,035 ஆகும். இதைக் கடக்கும் நிலையில், 10,180 அடுத்த இலக்காக அமையும். சப்போர்ட், 9,780 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்மெஹ்மானி ஆர்கானிக்ஸ், ஸ்ரீகாளகஸ்தி பைப்ஸ், கிராம்ப்டன் கிரீவ்ஸ், கெபாசிடி இன்பிரா, ஜெய் கார்ப்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|