வரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரவேற்புவரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பங்கு சந்தை போக்­குகள் உணர்த்­து­வது என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2017
00:10

பங்குச் சந்தை முத­லீடு தொடர்­பாக, பல பாடங்கள் இருக்­கின்­றன. இது­த­விர, பங்குச் சந்தை போக்கு தொடர்­பாக, பல­வித கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

சந்தை இறங்கும் போது, என்ன செய்ய வேண்டும்; காளை போக்கின் போது, என்ன செய்ய வேண்டும் என்­பது தொடர்­பாக, பலவித கருத்­துக்கள் சொல்­லப்­ப­டு­கின்­றன. இவற்றில், பல வெறும் மாயை­க­ளாக கூட இருக்­கலாம். எனவே, இவற்றை ஆரா­யாமல், அப்­ப­டியே பின்­பற்றக் கூடாது.உதா­ர­ணத்­திற்கு, பல முத­லீட்­டா­ளர்கள் பத்­தி­ரங்­களை வாங்கி வைத்துக் கொள்­வது, மியூச்­சுவல் பண்டு அல்­லது, இ.டி.எப்., திட்­டங்­களில் முத­லீடு செய்­வதை விட, பாது­காப்­பா­னது என, கரு­து­கின்­றனர்.

இதனால், வட்டி விகித போக்கின் தாக்­கத்தில் இருந்து, தப்­பிக்­கலாம் என, நினைக்­கின்றனர். ஆனால், பத்­தி­ரங்கள் சார்ந்த மியூச்­சுவல் பண்டு என்­பவை, பத்­தி­ரங்­களின் தொகுப்பே ஆகும். பத்­தி­ரங்­களை முதிர்வு காலம் வரை வைத்­தி­ருக்கும் போது, முதிர்வு தொகை கிடைக்கும் என்­றாலும், பத்­தி­ரங்கள் வட்டி விகி­தத்­துடன் இணைக்­கப்­பட்­டவை என்­பதால், அதன் தாக்கம் நிச்­சயம் இருக்கும். ஆக, சந்­தையில் எப்­போதும், ‘ரிஸ்க்’ இருக்கும். அதை சரி­யாக கையாள்­வதே முக்­கியம்.

அதே போல, சந்­தையில் குறை­வான பரி­வர்த்­தனை நிகழும் போது, அதில் பங்­கேற்­காமல் விலகி இருக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்­கி­றது. வழக்­கத்தை விட, வர்த்­தக அளவு குறை­வாக இருந்தால், நிதி கழக முத­லீட்­டா­ளர்கள் பங்­கேற்­கா­ததை உணர்த்­து­வ­தாக, இதற்கு காரணம் சொல்­லப்­ப­டு­கி­றது. ஆனால், வர்த்­தக அள­விற்கும், சந்­தையின் போக்­கிற்கும் தொடர்பு இல்லை. உண்­மையில், சரியும் சந்­தி­யி­லேயே பலரும் அதி­க­மாக பங்­கு­களை விற்­கின்­றனர்; பயமே இதற்­கான காரணம்.

இதற்கு நேர் எதி­ராக, பணம் பார்ப்­ப­தற்­கான வாய்ப்பு, சந்­தையில் காத்­தி­ருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­வ­தையும், அப்­ப­டியே நம்பி விடக்­கூ­டாது. ஒரு பங்கை வாங்­கு­பவர் இருக்­கிறார் என்றால், அதன் பின்னே, விற்­ப­வரும் இருக்­கிறார் என்­பதே, சந்­தையின் அடிப்­படை. எனவே, திடீ­ரென எந்த பணமும் பாய்ந்து வந்து விடாது. பங்­கு­களை கடனில் வாங்­கு­வதை குறிக்கும், மார்ஜின் கடன் விகிதம் அதி­க­மாக இருப்­பதோ, குறை­வாக இருப்­பதோ, சந்­தையின் போக்கு தொடர்­பான எந்த குறிப்­பையும் கொண்­டு இ­ருப்­ப­தில்லை. இது, கடந்த கால செயல்­பாட்டை குறிக்கும் கார­ணி­யாக இருக்­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)