இந்தியாவின் காபி ஏற்றுமதி 3.77 லட்சம் டன்னாக அதிகரிப்புஇந்தியாவின் காபி ஏற்றுமதி 3.77 லட்சம் டன்னாக அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.65.25 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.65.25 ...
ஜி.டி.பி., 7 சதவீதமாக உயரும்: ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2017
23:50

புதுடில்லி : ‘‘நடப்பு, ௨௦௧௭ – 18ம் நிதி­யாண்­டின், மூன்று மற்­றும் நான்­காம் காலாண்­டில், ஜி.டி.பி., எனப்­படும், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7 சத­வீ­த­மாக உய­ரும்,’’ என, ரிசர்வ் வங்கி கவர்­னர், உர்­ஜித் படேல் நம்­பிக்கை தெரி­வித்து உள்­ளார்.

கடந்த, 4ம் தேதி, ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை வெளி­யி­டப்­பட்­டது. அதில், வேளாண் மற்­றும் துணை துறை­களின், உற்­பத்தி மதிப்பு வளர்ச்சி மற்­றும் கரீப் பருவ உணவு தானிய உற்­பத்தி குறை­யும் என்ற மதிப்­பீட்­டால், நடப்பு நிதி­யாண்­டின், ஜி.டி.பி., 7.3லிருந்து, 6.7 சத­வீ­த­மாக குறைத்து நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது. இந்­நி­லை­யில், ‘நடப்பு மற்­றும் நான்­கா­வது காலாண்­டில், ஜி.டி.பி., உய­ரும்’ என, உர்­ஜித் படேல் கூறி­யி­ருப்­பது, பொரு­ளா­தார வல்­லு­னர்­க­ளி­டையே, வியப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இத்­த­கைய நிலைப்­பாடு குறித்து, உர்­ஜித் படேல் அளித்த பேட்டி: நடப்பு நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான, முதல் காலாண்­டில், ஜி.டி.பி., 5.7 சத­வீ­த­மாக குறைந்­து உள்­ளது. இதை, ஜி.எஸ்.டி., முறைக்கு மாறு­வதை முன்­னிட்ட தாக்­க­மா­கவே கருத வேண்­டும். இந்த பாதிப்­பில் இருந்து, நாடு மீள்­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­கின்றன. குறிப்­பாக, வாக­னம் மற்­றும் இரு­சக்­கர வாக­னங்­கள் விற்­பனை சூடு­பி­டித்­துள்­ளது.

‘நிக்கி’ நிறு­வ­னம் வெளி­யிட்ட, சேவை­கள் துறைக்­கான வளர்ச்சி குறி­யீடு, ஆகஸ்­டில் இருந்­ததை விட, செப்­டம்­ப­ரில், 3 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. அது போல, தொழில் துறை­யில், முக்­கிய எட்டு துறை­களின் உற்­பத்தி வளர்ச்சி குறி­யீடு, 2016 ஆக., மாதத்தை விட, இந்­தாண்டு ஆகஸ்­டில், 4.9 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. இந்த விப­ரங்­களின் அடிப்­ப­டை­யில், நடப்பு, அக்., – டிச., வரை­யி­லான, மூன்­றாம் காலாண்­டி­லும், 2018 ஜன., – மார்ச் வரை­யி­லான, நான்­காம் காலாண்­டி­லும், ஜி.டி.பி., 7 சத­வீ­தத்தை தாண்­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை குறைக்­கா­மல், 6 சத­வீ­த­மா­கவே நீட்­டித்­தி­ருப்­பது குறித்து, மாறு­பட்ட கருத்­துக்­கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்றன. ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு­விற்கு, நாட்­டின் வளர்ச்­சி­யில் எப்­போ­தும், அதிக அக்­க­றை­யும், கவ­ன­மும் உள்­ளது. அதே சம­யம், வட்­டியை குறைப்­ப­தால் ஏற்­படும் பண­வீக்­கத்­தில் தான், ஜி.டி.பி., வளர்ச்சி காண வேண்­டும் என்­பதை ஏற்க முடி­யாது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

பணவீக்க இலக்கு உயர்வு:
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதி­யாண்­டிற்­கான பண­ வீக்­கத்தை, 4 சத­வீ­தத்­திற்­குள் வைக்க இலக்கு நிர்­ண­யித்­து இருந்­தது. இந்­நி­லை­யில், கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்ட, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறி­விப்­பில், ‘ஜி.எஸ்.டி.,யின் தாக்­கம், உணவு தானிய உற்­பத்தி குறை­யும் என்ற மதிப்­பீடு போன்­ற­வற்­றால், இரண்­டா­வது அரை­யாண்­டில், நாட்­டின் பண­வீக்­கம், 4.2 – 4.6 சத­வீ­த­மாக உய­ரும்’ என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)