பதிவு செய்த நாள்
10 அக்2017
17:45
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கி உயர்வுடன் முடிந்தன. நிப்டி மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளை எட்டியது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி., குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று முதலே உள்நாட்டில் உள்ள முக்கிய நிறுவன பங்குகள், குறிப்பாக சிறுதொழில் தொடர்பான பங்குகள் அதிக பயன் அடைந்தன. மேலும் ஆசிய பங்குச்சந்தைகள் மற்றும் ரூபாயின் மதிப்பும் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.52 புள்ளிகள் உயர்ந்து 31,924.41-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 28.20 புள்ளிகள் உயர்ந்து 10,016.95-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|