விரைவில் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் விற்பனை விரைவில் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் விற்பனை ... ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம் ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம் ...
‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்பம் ஐ.டி., துறை வேலைவாய்ப்பை பறிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2017
05:20

புதுடில்லி : ஐ.டி., துறை­யில், ‘ஆட்­டோ­மே­ஷன்’ தொழில்­நுட்ப பயன்­பாடு பெருகி வரு­வ­தால், அடுத்த, 6 – 12 மாதங்­களில், வேலை­வாய்ப்பு குறை­யும் என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

ஐ.டி., என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களின் வேலை­வாய்ப்பு குறித்து, எக்ஸ்­பெ­ரிஸ், ஐ.டி., நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: இந்­திய, ஐ.டி., துறை­யில், இது­வரை இல்­லாத வகை­யில், முன்­னணி நிறு­வ­னங்­கள், அதி­க­மா­னோரை பணி­யில் இருந்து விடு­விக்க திட்­ட­மிட்டு உள்ளன. இந்த நட­வ­டிக்கை, அடுத்த, 6 – 12 மாதங்­கள் நீடிக்­கும் என, தெரி­கிறது. ‘ஆட்­டோ­மே­ஷன்’ எனப்­படும், தன்­னிச்­சை­யாக செயல்­படும் சாப்ட்­வேர் பயன்­பாடு, மின்­னணு தொழில்­நுட்ப பர­வ­லாக்­கம் ஆகி­ய­வையே, இதற்கு கார­ணம். அத­னால், ஐ.டி., வல்­லு­னர்­கள், அதிக தேவைப்­பாடு உள்ள, நவீன தொழில்­நுட்­பங்­களில், தங்­கள் திற­மையை வளர்த்­துக் கொள்ள வேண்­டும்.

குறிப்­பாக, ‘எஸ்.ஏ.ஏ.எஸ், இ.ஆர்.பி., ஆர்­டி­பி­ஷி­யல் இன்­டெ­லி­ஜன்ஸ்’ போன்ற, அதி­வே­கத்­து­டன், மிகத் துல்­லி­ய­மாக செயல்­ப­டக்­கூ­டிய தொழில்­நுட்­பங்­களில், போதிய பயிற்சி பெற வேண்­டும். இந்த தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்­து­வ­தால், நிறு­வ­னங்­களின் செலவு பெரு­ம­ளவு குறை­யும். அத­னால், இத்­த­கைய தொழில்­நுட்­பங்­களில், நிபு­ணத்­து­வம் உள்­ள­வர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு, அடுத்த இரு ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கும். அதே சம­யம், உயர் பொறுப்­பில் உள்­ள­வர்­க­ளுக்­கான பணி வாய்ப்பு குறை­யும். அத்­த­கை­யோரை வெளி­யேற்றி, ஏற்­க­னவே, நவீன தொழில்­நுட்­பங்­களில் போதிய திறன் கொண்ட, புதி­ய­வர்­களை நிய­மிக்க விரும்­பு­வ­தாக, ஆய்­வில் பங்­கேற்ற பெரும்­பான்மை நிறு­வ­னங்­கள் கூறி­யுள்ளன.

பணி­யில் சேர்த்து, தொழில்­நுட்ப பயிற்சி அளிப்­பதை விட, முன்­கூட்­டியே பயிற்சி பெற்ற புதி­ய­வர்­களை நிய­மிக்­கவே, நிறு­வ­னங்­கள் விரும்­பு­கின்றன. அவை, சந்­தை­யில் அறி­மு­க­மா­கும், புதிய தொழில்­நுட்­பங்­களை உட­னுக்­கு­டன் அணு­கும் திறன் கொண்­ட­வர்­க­ளுக்கே, பணி வாய்ப்­பில் முன்­னு­ரிமை அளிக்­கின்றன.ஐ.டி., துறை­யில், தொழில்­நுட்ப நிபு­ணத்­து­வம் உள்ள புதி­ய­வர்­களை, பணிக்கு அமர்த்­தும் புதிய போக்கு உரு­வாகி உள்­ளது. இந்­திய, ஐ.டி., துறை­யில், ஒட்­டு­மொத்த வேலை­வாய்ப்பு சாத­க­மாக உள்ள போதி­லும், திறன் உள்­ளோ­ரை­யும், திறனை மேம்­ப­டுத்­திக் கொள்­வோ­ரை­யும் இலக்­கா­கக் கொண்டே, நிறு­வ­னங்­களின், புதிய வேலை­வாய்ப்பு திட்­டங்­கள் உள்ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

பிரகாசமான வாய்ப்பு:
‘சாப்ட்­வேர் ஒரு சேவை’ என்­ப­தன் சுருக்­கமே, ‘எஸ்.ஏ.ஏ.எஸ்.,’ அல்­லது ‘சாஸ்’ எனப்­ப­டு­கிறது. இதில், ஐ.டி., நிறு­வ­னங்­கள், விரும்­பும் போது, தேவை­யான சாப்ட்­வேர் சேவையை, குறிப்­பிட்ட கட்­ட­ணத்­தில் பெற­லாம். செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்ப சாப்ட்­வேர்­கள், மனி­த­னுக்கு ஒப்­பாக சிந்­தித்து, பல மடங்கு விரை­வாக கட்­ட­ளை­களை முடிக்க கூடி­யவை. நிறு­வ­னச் செயல்­பா­டு­கள் முழு­வ­தை­யும் திட்­ட­மிட்டு செயல்­ப­டுத்த, மேகக் கணினி தொழில்­நுட்­பம் சார்ந்த, இ.ஆர்.பி., சாப்ட்­வேர் உத­வு­கிறது. இத்­து­றை­களில் நிபு­ணத்­து­வம் உள்­ளோ­ருக்கு, வேலை­வாய்ப்பு பிர­கா­ச­மாக உள்­ளது.
-மன்மீத் சிங், தலைவர், எக்ஸ்பெரிஸ் ஐ.டி.,

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)