பதிவு செய்த நாள்
14 அக்2017
04:00
புதுடில்லி : ‘உலகளவில், ஐ.ஓ.டி., எனப்படும், கருவிகள் இடையிலான இணைய தொழில்நுட்ப வசதிக்கு, 2020ல், 1.29 லட்சம் கோடி டாலர் செலவிடப்படும்’ என, ஐ.டி.சி., – ஏரிஸ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: சர்வதேச அளவில், கருவிகள் இடையிலான, இணைய தொழில்நுட்ப வசதியும், பயன்பாடும் பெருகி வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள், இந்த தொழில்நுட்பத்தை பின்பற்றுவதில், துவக்க நிலையிலோ அல்லது செயலாக்கச் சிந்தனையிலோ உள்ளன. அதனால், ஐ.ஓ.டி., பயன்பாடு மிக வேகமாக பெருகும்.
கடந்த, 2015ல், ஐ.ஓ.டி., தொழில்நுட்பத்திற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், 62,522 கோடி டாலர் செலவிட்டு உள்ளன. இது, ஆண்டுக்கு, சராசரியாக, 15.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2020ல், 1.29 லட்சம் கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதே காலத்தில், ஐ.ஓ.டி., கட்டமைப்பின் கீழ் நிறுவப்பட்ட முனையங்கள் எண்ணிக்கை, 1,210 கோடியில் இருந்து, 3,000 கோடியாக உயரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|