பதிவு செய்த நாள்
18 அக்2017
23:52
புதுடில்லி : எம்.சி.எக்ஸ்., கமாடிட்டி சந்தையில், தங்கம் மீதான, ‘ஆப்ஷன்’ வர்த்தகம் துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக அறிமுகமாகியுள்ள இந்த வர்த்தகத்தை, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி துவக்கி வைத்து பேசியதாவது:
எம்.சி.எக்ஸ்., கமாடிட்டி சந்தையில், ‘கோல்டு ஆப்ஷன்’ வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது, தங்கம் மீதான, முன்பேர வர்த்தகத்தில், மிக முக்கியமான முன்னேற்றம். இந்த பிரிவு, கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் புரிவோர் சந்திக்க நேரிடும், அனைத்து வகையான இடர்ப்பாடுகளில் இருந்தும் காக்கும்.
உலகில், தங்கம் வாங்குவதில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அதனால், ‘ஆப்ஷன்’ திட்டம் சிறப்பான வெற்றி பெறும் எனலாம். எந்த அளவிற்கு, வர்த்தகம் முறைப்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு, நுகர்வோர், நகை வியாபாரிகள் மற்றும் முன்பேர சந்தை வர்த்தகர்கள் பயன் பெறுவர். இந்தியாவில், கமாடிட்டி சந்தை அறிமுகமாகி, 14 ஆண்டுகள் கழித்து, தங்கம் மீதான, ‘ஆப்ஷன்’ வர்த்தகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|