பதிவு செய்த நாள்
24 அக்2017
00:30
புதுடில்லி : ‘அதிக நிதி ஒதுக்கீடு; குறைந்த செலவில், தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பது போன்றவற்றால், இந்திய சுற்றுலா துறை, 2.5 சதவீதம் வளர்ச்சி அடையும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ‘அசோசெம் – யெஸ் பேங்க்’ இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்திய சுற்றுலா துறைக்கு, அனைத்து சுற்றுலாத் தலங்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும்; இதர தேவைகளுக்காகவும், மத்திய பட்ஜெட்டில், அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பிற நாடுகளை விட, இந்தியாவில், மிகக் குறைந்த செலவில், தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. இது போன்ற அம்சங்களால், இந்திய சுற்றுலா துறை, 2.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா துறையின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க, ‘தேசிய சுற்றுலா ஆணையம்’ எனும் அமைப்பை உருவாக்க வேண்டும். இதன் மூலம், இத்துறையில், சந்தைப்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவிப்பது, வளர்ச்சி திட்டங்களை வகுப்பது உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்தலாம்.
ஆசியாவின், மிகப்பெரிய மருத்துவ மையமாக, இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பெரிய அறுவை சிகிச்சைக்கான செலவை பொறுத்தவரை, வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில், 20 சதவீதம் அளவே செலவாகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|